மழைத் துளிகளினூடே மின்னும் நினைவுகளாய்

மென்னிருள் கவிழ்ந்திருந்த அந்த மாலை கொஞ்சம் கூடுதல் அடர்த்தியை போர்த்திக்கொண்டிருந்தது போல இருந்தது, அன்றும் அதன் முன் தினமும் நல்ல மழை. சாலையோர வியாபாரிகளுக்குத்தான் கொஞ்சம் சவாலே என்ற போதம் சந்தோசப்படாமல் இல்லை தவிர ஏனைய எல்லோருக்கும் கூட இம்மழை மகிழ்வையே தந்தது. முழுவதும் ஏற்றப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், கண்ணாடிக்கு அந்தபக்கம் ஜன்னலில் அதிர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளினூடே சாலையோரக் கடைகளின் வண்ண வண்ண விளக்குகள் மின்னி ஒளிர்ந்தன, நிலை கொள்ளாத நினைவு துளிகள் ஒவ்வொன்றின் பிரதிபலிப்பிலும் நீ இப்படித்தான் என் மனதிற்குள் வண்ண வண்ணமாய் மின்னிக்கொண்டிருக்கிறாய். மழை நாள் மட்டுமல்ல இம் மானுடம் உள்ளவரை இந்த பிரபஞ்சத்தின் பெரும் காதலின் பிரதிபலிப்பாய் இவ்வுணர்வு அண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு சிறுமூலையில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். இதோ நிகழ்வு நடக்கும் இடம் வந்து விட்டது, மழையும் சற்று ஓய்ந்துவிட்டது. வானம் அனேகமாக மேகங்கள் இன்றி தெளிவாக இருந்திருக்க வேண்டும் ஆனால் முன்னிரவு பொழுது ஆனதால் கருநீலமும் அடர் செந்நிறக் கருஞ்சாந்தும் கலந்த ஒரு ரம்மியம...