Posts

Showing posts from August, 2019

மழைத் துளிகளினூடே மின்னும் நினைவுகளாய்

Image
மென்னிருள் கவிழ்ந்திருந்த அந்த மாலை கொஞ்சம் கூடுதல் அடர்த்தியை போர்த்திக்கொண்டிருந்தது போல இருந்தது, அன்றும் அதன் முன் தினமும் நல்ல மழை. சாலையோர வியாபாரிகளுக்குத்தான் கொஞ்சம் சவாலே என்ற போதம் சந்தோசப்படாமல் இல்லை தவிர ஏனைய எல்லோருக்கும் கூட இம்மழை மகிழ்வையே தந்தது. முழுவதும் ஏற்றப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், கண்ணாடிக்கு அந்தபக்கம் ஜன்னலில் அதிர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளினூடே சாலையோரக் கடைகளின் வண்ண வண்ண விளக்குகள் மின்னி ஒளிர்ந்தன, நிலை கொள்ளாத நினைவு துளிகள் ஒவ்வொன்றின் பிரதிபலிப்பிலும் நீ இப்படித்தான் என் மனதிற்குள் வண்ண வண்ணமாய் மின்னிக்கொண்டிருக்கிறாய். மழை நாள் மட்டுமல்ல இம் மானுடம் உள்ளவரை இந்த பிரபஞ்சத்தின் பெரும் காதலின் பிரதிபலிப்பாய் இவ்வுணர்வு அண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு சிறுமூலையில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். இதோ நிகழ்வு நடக்கும் இடம் வந்து விட்டது, மழையும் சற்று ஓய்ந்துவிட்டது. வானம் அனேகமாக மேகங்கள் இன்றி தெளிவாக இருந்திருக்க வேண்டும் ஆனால் முன்னிரவு பொழுது ஆனதால் கருநீலமும் அடர் செந்நிறக் கருஞ்சாந்தும் கலந்த ஒரு ரம்மியம...

கோமா-ளி | இது திரை விமர்சனம் அல்ல

Image
கொஞ்சம் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணலாமேங்கற ஐடியா வந்தப்போ வழக்கம்போல மைன்டுக்கு வந்த யோசனை ஏதாவது படத்துக்கு போலாம்ங்கறதுதான். சரின்னு ப்ரூக்பீல்ட்ஸ் மால்ல இருக்கிற ஸ்பை (SPI) சினிமாஸ் வெப்சைட்ட ஓபன் பண்ணி 'கோமா'ளிய க்ளிக் பண்ணி டிக்கெட்ஸ் இருக்கான்னு பாத்தா... ஐ.! ஜாலி டிக்கெட் இருக்கு கூடவே ஒரு ஐயோ! ஷாக் எதுக்குன்னா டிக்கெட் விலை 190.74 கூட ₹30+ புக்கிங் சார்ஜஸ் வேற ஆக மொத்தம் ஒரு டிக்கெட் 220+ அப்படின்னா ரெண்டு டிக்கெட் 450+ ஆகும்ல... "டேய்... எல்லாஞ்சரி இவளோ பேசரீல ஏன் மாலுக்கு போற வேற எவளோவோ தியேட்டர் இருக்குல்ல" "தியேட்டர் எல்லாம் இருக்கு... ஆனா மால்கள் மட்டுந்தான ஆக்ஸஸபிளிட்டியோட இருக்கு?" "புரியலையே..." "ம்க்கும்... அதாவது மால்கள்ல தான் வீல்சேரோட எங்க வேணும்னாலும் போக முடியம் படிகள், மேடுகள் போன்ற தடைகள் இருக்காது லிஃப்ட் மற்றும் ரேம்ப்கள் எல்லா இடங்களுக்கும் இருக்கும். அதுவுமில்லாம மால் நிர்வாகம் அவங்களே வீல்சேரும் வச்சிருப்பாங்க" "ஓ வீல்சோரட உலாத்த ஒரு ஸ்பேஸ் இருக்குன்னா அது ஆக்ஸஸபிள் ஏரியாவா?" "அத...

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி - அசைவம்

Image
இது முந்தைய பார்ட்டோட கன்டினியூவிட்டி தான் ஆனா கடந்த பதிவுல உறுதியளித்த மாதிரியே இது எக்ஸ்க்லூசிவ் அசைவம் போஸ்ட். இட்லிக்கான அசைவ சைட்டிஷ்கள் குழம்பு, குருமா, கிரேவி, வறுவல் என்று நான்கு வகைப்படும் அதாவது என் சிற்றறிவுக்கு எட்டியபடி. இரத்தப்பொறியல், சூப், கோலா உருண்டைகள் போன்றவைகளை உடன் கொறித்துக்கொள்ள வைத்துக்கொள்ளலாம் சரி வாங்க என் ஃபேவரெட் காம்போஸ்கள பாப்போம். சுட சுட இட்லி முன்றை எடுத்து முக்கோணமாக ஒரு தோராயமான பிரமீட் வடிவத்தில் அடுக்கி வைத்துக்கொண்டு அதன் தலைமேல் சூடான மீன் குழம்பு ஒரு கப்பை ஊற்றி குப்பென்று எழும் ஆவியில் மூச்சிழுத்து அந்த இட்லியின் மனம் + மீன்கொழம்பின் அரோமா இரண்டையும் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும். அதே தம்மில் இரண்டு வாய் இட்லி குழம்பு பட்டதும் படாததுமாக லபக் லபக் என்று முழுங்கி கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த ரவண்டில் குழம்புக்கு இட்லியை தொட்டுக்கொள்வது போல சாப்பிட வேண்டும்... இடையிடையே குழம்பில் போட்ட மீன் பீஸுகளை தனியாக கவனித்து கொள்ளுதல் சிறப்பு. மீன் + சீஸ் போட்டு செய்த கோலா பால்ஸ் இரண்டு உருண்டைகள் வ...

கோவை - மேட்டுப்பாளையம் : முதல்முறையாக இரயிலில்

Image
இன்று சுதந்திர தினம் எல்லோரும் நாம் படித்த அல்லது படிக்கின்ற பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு சென்று நமது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்போம் இன்னும் சிலர் தங்கள் பணி புரிகின்ற அலுவலகங்களில் சென்று கொண்டாடி இருப்போம். நான் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடினேன் சற்று வேறு விதமாக... அதாவது தேசத்திற்கான மிக முக்கியமான வளர்ச்சியின் பாதையில் முதன்மையானதாக இருக்கக்கூடிய கிராமசபை நிகழ்வின் கூட்டத்திற்கு என்னை இன்று நான் முதன்முறையாக அறிமுகம் செய்து கொண்டேன். இந்திய நாட்டின் முதுகெலும்பு அதன் கிராமங்கள் என்று நமது தேசத்தந்தை கூறியிருப்பதாக நாம் அறிந்திருக்கிறோம் அத்தகைய கிராமங்களின் முன்னேற்றமே இந்த தேசத்தின் முன்னேற்றம் என்றால் அந்த முன்னேற்றத்திற்கு பல்வேறு பாதைகளும் பல்வேறு செயல்திட்டங்களும் இருக்கும் பட்சத்திலும் கூட சுயசார்பு சுய ஆட்சி முறை வழியில் ஒரு பஞ்சாயத்தின் கீழ் இருக்கக்கூடிய கிராமங்கள் அதனுடைய மக்களிடமிருந்து எத்தனை வரிகள் பெறுகின்றன அதன் மூலம் அந்த மக்களுக்கான வசதிகளை அந்த அரசும் நிர்வாகமும் ஏற்படுத்தி தருகின்றனவா என்பதை வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அதாவது கிராமத்தின் மொத்த ம...

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?

Image
இட்லியை எஞ்சாய் செய்வது எப்படி ? (சைவம்) அது என்னடா தலைப்புல அடைப்புக்குறிகளுக்குள்ள சைவம் அப்படின்னு போட்டிருக்கேன்னு பார்க்கிறீங்களா... அது ஒண்ணும் இல்லைங்க இந்த பதிவுல நாம பார்க்க போறது சைவ சைட்டிஷ் காம்போக்களுடன் கூடிய இட்லி வகைகள் அப்போ அசைவம்னா தக்காளி தொக்கா என்று எண்ணாதீர்கள் அது தனி பதிவில் சரி இட்லியை எஞ்சாய் செய்ய துவங்கும் முன் அடிப்படையாக பரவலாகக் கிடைக்கின்ற சிலபல இட்லி வகைகளையும் அதன் செய்முறை கேட்டகிரி வாயிலாக மூன்று அல்லது நான்கு விதங்களாக பிரித்துக் கொள்வோம் அதன்பின்னர் இக்கட்டுரையின் முக்கிய பகுதிக்கு செல்வோம். இட்லி 1 : இட்லி குண்டான் என்று பரவலாக அறியப்படுகின்ற ஒரு பாத்திரத்தில் செய்யப்படுவது நீராவியில் வேக வைக்கும் பொழுது இட்லி மாவை நேரடியாக தட்டில் ஊற்றாமல் ஈரமான ஒரு துணியை தட்டில் பரப்பி அதில் இட்லி மாவை ஊற்றி தயார் செய்யப்படும். இட்லி 2 : மேற்சொன்ன இட்லி குண்டான் பாத்திரத்தில் செய்யப்படுவது போல தான் என்றாலும் நகர்ப்புறங்களில் இது சாப்பாடு செய்யும் குக்கருக்குள் வைத்து செய்யப்படுகிறது இதற்கு பெயர் குக்கர் இட்லி. குக்கருக்குள் வைக்கக் கூடிய சிறிய அளவி...