Posts

Showing posts from September, 2014

ஓ'வென

நண்பர்களுடன் சிறிது அரட்டை... அம்மாவுடன் சின்ன சின்ன சண்டைகள்... அலுவலகத்தின் கலந்துரையாடல்... அடுத்தவர்களுக்கு அறிவுரை...  அறிவு சார்ந்த வாசிப்பு... ஆய்வுகளுக்கான திட்டமிடல்.. என சாதரணமாகவே இருந்த போதிலும்  ஓ'வென அழுதுகொண்டிருந்த  உள்மனதின் பேரிரைச்சல் உலகறியும் என்ற அவசியம் ஏதுமில்லை புத்தகங்களில் புதைந்து மீண்டு வருகையில் எத்தனையோ விஷயங்களை மறந்ததுண்டு... உன் நினைவுகள் மட்டும் விதிவிலக்கு. விவாதங்கள் இல்லை வீண் சண்டைகள் இல்லை.. ஆனாலும் நம்மிடையே ஏன் இந்த பிரிவு.. கேள்விகள் கேட்பது எளிது... நான் கேட்டுவிட்டேன் இனி காலம் பதில் சொல்லட்டும்.

அனுபவப்பகிர்வு

http://rightmantra.com/ தளத்தில் 'எங்கே செல்லும் இந்த பாதை?' என்கிற தலைப்பில் http://rightmantra.com/?p=13603 இந்த கட்டுரையை வாசித்துகொண்டிருந்தேன் . அதில் ... பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்துக்கும் சினிமா சாங்க்ஸ் ரொம்ப முக்கியம் அப்படிங்கிற IMPRESSION உங்கள் குழந்தைகளுக்கு வரவேகூடாது!” இப்படி ஒரு பத்தி வருகிறது.. ஒரு விமர்சகன் மற்றவர்களுக்கு அறிவூட்ட வேண்டும் ( a criticist must educate others) அன்பதன் அடிப்படையில் இதோ ஓர் அனுபவ பகிர்வு. கடந்த ஆகஸ்ட் மாதம் நான் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன் அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஒரு சிறு சப்தத்திலும் சினிமா எட்டிகூட பார்க்கவில்லை. சர்வதேச கலாசாரங்களின் இசை மற்றும் நடன வடிவமைப்பை மேடையில் அரங்கேற்றியிருன்தனர். ஒவ்வொரு கலாசாரத்தின் இசைவடிவத்தையும் இதுபோல ஒரு ஸ்க்ரிப்டில் பொருத்தி அதை அழகியல் ஆக்குவதென்பது சாதாரண விஷயமா? அதை மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து மிக நேர்த்தியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். இத்தனை பெரிய நிகழ்வு ஆனால் ஒரு நொடிகூட சினிமாவின் சத்தம் கேட்கவில்லை. எவ்வளவு பெரிய பாராட்டுக்குரிய விஷயம் இது. :) இந்...

வாசனை

இங்கு இருப்பவர்கள் மனிதர்கள் தான், இரண்டு கை கால்கள் கண் மூக்கு வாய் என எல்லாமே நம்மை போலத்தான் இருக்கிறது. அவர்களும் பேசுகிறார்கள் ஆனால் என்ன மொழி என்றுதான் புரியவில்லை. ஆனால் எல்லோரும் நல்லபடியாக வாழ்கிறார்கள் . கடற்கரையில் ஆடி பாடி மகிழ்கிறார்கள். விதவிதமான அலங்காரங்கள் செய்த கொள்கிறார்கள், நிறைய புதிய உணவுகள் சாப்பிடுகிறார்கள், உறவுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். ஜாதி, இனம், மதம், மொழி என்று அவர்களுக்குள் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது, ஆண்/பெண் பாகுபாடு கூட கிடையாது ஆனால் . . . ஒரே ஒரு பாகுபாடு, நல்லவர்கள்/கெட்டவர்கள். நல்லவர்கள் மத்தியில் உள்ள பெண்கள் திடீரென ஒவ்வொருவராக மாயமாகின்றனர். அப்படித்தான் அன்று அவளும் கடத்தபட இருந்தாள், கடத்தியும் விட்டார்கள் ஆனால் யாரோ காப்பாற்ற மயங்கி சரிந்த அவள் நினைவு பெறுகையில் இரும்பு குப்பை கிடங்கு ஒன்றில் தான் இருப்பதை உணர்கிறாள் தூரத்தில் யாரோ பேச கேட்டது காதுகளை தீட்டிக்கொண்டு கண்களை திறக்க அங்கே இரு குழுக்களுக்கு இடையே அதீத சண்டை நடக்க காண்கிறாள். சில நிமிட சண்டையில் வெற்றி பெற்ற குழு அங்கு மறைத்து வைக்கபட்டிருந்த மேலும் சில பெண்களை காப்பாற்ற, அ...

அவள் என்றொரு மதம் -Sarvs Saga

'அ...' முதல் எழுத்தை தொடங்கவிட்டேன். ஆனால் அப்பாவிடமோ அம்மாவிடமோ என் அழுகையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனினும் அழுவதற்கு, சோகத்தை யாருடனேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். சோகத்தை பகிர்ந்து கொள்ள என்னை நன்கு புரிந்துகொண்ட நபர் எவரும் உடன் இல்லை. அழுவதற்கு ஆசையாய் உள்ளதற்கு நெஞ்சில் இருக்கும் சோகத்தில் பாதியேனும் அழுகையோடு கரையட்டுமே என்பது தான் என்னை பொருத்தமட்டில் காரணம் ஆகும். கடைசியில் பகிர்ந்து கொள்ள நபரை தேர்ந்தெடுத்த பின், எழுத துவங்கினேன். 'அன்புள்ள எனக்கு. . .' எனக்கு நானே கடிதம் எழுதுவது முட்டாள்த்தனமாய் பட்டது. மற்றும், என்னிடம் பகிர்ந்து கொண்டால் அழுகை வருமா என்பதும் சரியாய் தெரியவில்லை. ஆனால் கடிதம் எழுதினால் மனதின் வலி குறையும் என அறிந்திருப்பதால் இந்த முடிவு. சரி என ஒரு மனதாய் முடிவு செய்து கடிதத்தை தொடர்ந்தேன். 'அன்று...' கடிதத்தில் எழுதும் முன்பு ஒருமுறை மனதில் நிகழ்வுகளை அசைபோட்டு பார்க்க நினைத்தேன். அன்று தான் அவளைக் கண்டேன். ஆம், இது அவளைப் பற்றிய கடிதம் தான். சில சமயங்களில் ஓவியம் உயிர் பெற்று வருவதுண்ட...

சிவ. விஜயபாரதி - கவிதைகள் 2

Image
மாயமாகும் எண்கள் எண்களை பெற்று நகர்கிற பயனம்கள், மொபைல் தண்ணில விழுந்துருச்சு மொபைல் மாத்திட்டேன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு இன்னொரு மொபைல்ல இருக்கு எண்களை நீக்கிய யாரும் இதையே சொல்லி மீண்டும் பெறுகையில் புரியாமலே போகிறது வாழ்தல் நிமித்தம். ------------------------------------------------------------- பல்லுயிர் ஓம்புதல்  புல்கட்டை அவிழ்த்து மாட்டுக்குக் கொஞ்சமும் ஆட்டுக்குக்க் கொஞ்சமும்  கிள்ளிப் போட்டு முந்தானை உதறி முகம் துடைத்து கொள்ளையில் அமர்ந்தாள் மடியிலிருந்த  பலகாரங்களை பிரித்து பேரப் பிள்ளைகளுக்கு  திண்ணக் கொடுத்தாள் விளையாடப் போன  பெரியவனுக்கு எடுத்து  மறைத்துக் கொண்டு சின்னாச்சி  அரப்படி சுண்டுக்குள்ள  நொய்யரிசி  இருக்கு எடுத்து கோழிக்குஞ்சுக்கு போடுடீ – என்ற படியே குப்பையை கூட்டி ஒதுக்க சென்ற பாட்டி படிக்காமலே பாடம் நடத்துகிறாள்  ‘ பல்லுயிர் ஓம்புதல் ’ ------------------------------------------------ வெக்கை தாளா கருவேலம் பூச்சிகள் ...