வாசனை

இங்கு இருப்பவர்கள் மனிதர்கள் தான், இரண்டு கை கால்கள் கண் மூக்கு வாய் என எல்லாமே நம்மை போலத்தான் இருக்கிறது. அவர்களும் பேசுகிறார்கள் ஆனால் என்ன மொழி என்றுதான் புரியவில்லை. ஆனால் எல்லோரும் நல்லபடியாக வாழ்கிறார்கள் . கடற்கரையில் ஆடி பாடி மகிழ்கிறார்கள். விதவிதமான அலங்காரங்கள் செய்த கொள்கிறார்கள், நிறைய புதிய உணவுகள் சாப்பிடுகிறார்கள், உறவுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். ஜாதி, இனம், மதம், மொழி என்று அவர்களுக்குள் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது, ஆண்/பெண் பாகுபாடு கூட கிடையாது ஆனால் . . . ஒரே ஒரு பாகுபாடு, நல்லவர்கள்/கெட்டவர்கள்.
நல்லவர்கள் மத்தியில் உள்ள பெண்கள் திடீரென ஒவ்வொருவராக மாயமாகின்றனர். அப்படித்தான் அன்று அவளும் கடத்தபட இருந்தாள், கடத்தியும் விட்டார்கள் ஆனால் யாரோ காப்பாற்ற மயங்கி சரிந்த அவள் நினைவு பெறுகையில் இரும்பு குப்பை கிடங்கு ஒன்றில் தான் இருப்பதை உணர்கிறாள் தூரத்தில் யாரோ பேச கேட்டது காதுகளை தீட்டிக்கொண்டு கண்களை திறக்க அங்கே இரு குழுக்களுக்கு இடையே அதீத சண்டை நடக்க காண்கிறாள். சில நிமிட சண்டையில் வெற்றி பெற்ற குழு அங்கு மறைத்து வைக்கபட்டிருந்த மேலும் சில பெண்களை காப்பாற்ற, அவள் அவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்.    பெண்களின் கண்ணீரில் ஒரு வித வாசனை உள்ளதாம் அதை சேகரித்து அதிலிருந்து வாசனை திரவியம் ஒன்றை தயாரிக்கவே இப்படிப்பட்ட கடத்தல்கள் .
இவனும், இவளும், இவர்களது தோழர்களும் அந்த தீயவர்கள் கூட்டத்தை அடியோடு அழிக்கிறார்கள்.
Posted via Blogaway

Posted via Blogaway

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?