Posts

Showing posts from June, 2014

சிவ. விஜய பாரதி - கவிதைகள்

கருகும் இளமை : அடர்ந்த பனிமூட்டம் குளிர்ந்த காற்று சன்னலினுள் நுழைந்து குளிராய் என்னைத் தாக்க எதிர்கொள்ள இயலாத என் உடல் சிலிர்த்து போனது நெடுநேர கண் விழிப்பில் புரண்டு புரண்டு நான் மரக்கிளையில் அமர்ந்த ஆந்தையின் அலறலாய் காமத்தீ எனக்குள் கோட்டான் சத்தம் குழந்தைக்கு ஆகாதென விரட்டும் வயோதிக மனமாய் விரட்டுகிறேன் கிளைவிட்டு கிளை தாவி மீண்டும் அமர்கிறது இறந்து போன கணவனைத் தேடும் என் இளமையை கருக்கிக் கொள்கிறேன் குழந்தைகளுக்காக சமூக சடங்குகளால் கட்டப்பட்ட என் மனக் கிடங்கின் அழுகை யாருக்குக் கேட்கும்.             வளமான ஏழ்மை பகலை இருளாக்கிய மேகம் நீர்க்காடென மழையைக் கொட்டுகையில் காற்றோடு கை கோர்த்து உடலில் பரப்பும் குளிரை ரசிக்க முடிவதில்லை ஒழுகும் ஓட்டை குடிசைக்குள். இரவும் இவனும்  தூக்கம் தொலைத்த இரவுகளில் கொசுக்கடியினூடே கொத்தித் தின்றது தனிமை போர்வைக்குள் நுழைத்துக் கொண்ட உடலை புழுக்கம் போர்த்தியிருப்பது போல மனசை அப்பிக் கிடந்தது திமிறிக் கொண்டிருக்கும் இளமை காதறுந்த செருப்பைப் போல துணையற்ற வாழ்க...

கோவம்

ஒவ்வொரு உணர்வுக்கும் மதிப்பு இருக்குங்க. அந்த உணர்வு உண்மையாவும், ஆழமாவும் இருக்கும் பட்ச்சத்தில். எனக்கு ஐ.டி துறை மேல ஒரு கோவம் இருக்கு. இதுல உண்மை அப்படிங்கறது என்னன்னா?? கோவம் வர்றதுக்கான காரணங்கள மனசாட்சிக்கு விரோதமில்லாம ஒத்துக்கரதுதான். கோவத்துக்கான அடிப்படை தூண்டுதல், ஏமாற்றம், ஏக்கம், தாகம் போன்ற எதிர்பார்ப்பின் எதிர்விளைவுகள். குழப்பாமானா ஏற்றதாழ்வுகள் நிறைந்த இந்த கல்வி வியாபாரத்துல டிகிரி முடிக்க இஷ்டம் இல்ல. சாஃப்ட்வேர் ஃபீல்டு உள்ள போயி லட்ச்சங்கள்ள சம்பாதிக்க முடியல . இப்படிதான் என் கோவம் துவங்கிச்சு அந்த துறை மேல சுமார் ஏழு ஆண்டுக்கு முன்பு. இப்போ கோவமும் அதிகரிச்சிருக்கு, காரணங்களும் கை நிறையா இருக்கு ஆனா முதல் காரணத்த தவிர. என்னோட ஏமாற்றங்களே என் வெறுப்புக்கு காரணம்ன்னு புரிஞ்சிக்கிட்ட அந்த நொடி முதல் அந்த துறைய புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். சாஃட்வேர்ல தான் காசு கொட்டும்ங்கர மாயைய விட்டு வெளிய வந்தேன். இவளோ பெரிய பூமில பணம் ஒரு போருட்டில்லன்னு தெளிவாகிட்டேன் இதெல்லாம் நடந்து நாலு வருஷம் ஆச்சு. என்னான்னே தெரில கடுப்பா இருக்கு என்று கோபம்கொள்வோர் அந்த உணர்வின் மத...

சாகச மாலை

அது ஒரு அழகான நாள் எப்பவும் போல, அலுவல் பணிகள் முடிச்சு கொஞ்சமா படிச்சு, நிறையா பேசி, நானும் நண்பன் சிவாவும் நிறையா பகிர்ந்துகிட்டு இருந்தோம்...  நேரம் போனதே தெரியல அந்த நாள் மாலை பொழுது இன்னும் சில நண்பர்கள சந்திக்க பூங்கா போக திட்டமாயிருந்தோம் . அது விடுமுறை நாள் இல்லை என்பதால் எனக்கு வழமையாக வரும் ஆட்டோ,டாக்சி அண்ணன்கள் பள்ளி சவாரி சென்று விட்டார்கள், என்ன செய்வது என தெரியாமல் குழம்ப, ராகுல் "என்ன இன்னும் கிளம்பலையா?"  என்றபடியே உள்ளே வந்தார். "பை வாக்லையே போய்டுவோமா" என நான் கேட்டதுதான் தாமதம் டமால் டிமில் என ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்தன வீல் சேரில் ஏறி வெளியே மெயின் கேட்டை அடைந்த போது முன் வீட்டு மாமா எதிர்பட்டார் "கிளம்பியாச்சா என கேட்டார் "பார்க் வரைக்கும் அங்கிள் என்றேன் " பார்த்து போப்பா என அவர் சொல்லி முடிக்கும் முன்பே ராகுல் விளையாட்டை துவக்கிவிட்டார், வீல் சேரில் ஏறும்போது யோசித்தேன் விசித்திரமான பயணமாக இருக்கும் என ஆனால் வீரமான பயணமாகவும் இருந்தத. சந்து, கட் ரோடெல்லாம் தாண்டி மெயின் ரோட்ட அடையறதுக்குள்ள எங்களோட இந்த பயணத்த ஊரே ரச...

ஒரு நிமிடத்தில் ஒரு வருடம்

ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்... 2013ல் ஆண்டு துவக்கத்தில் மிகுந்த  பரபரப்புடனும் பொறுப்புடனும் பல வேலைகளில் ஈடுபட்டு மே, ஜூன் காலகட்டங்களில் சற்றே பதுங்கி பயிற்சிகள் எடுத்துகொள்ள அமைதியான தருணம். தினமலர், வாரமலரின் ஸ்டார் ரைட்டர் அண்ணன் Murugaraj Lakshmanan அவர்கள் என்னை பற்றி எழுதினார், அது சரியாக கடந்த ஆண்டு இதே கால கட்டம், மீண்டும் மின்னல் வேகத்தில் செயல்பாடுகள் துவங்கின , தகுதிக்கும்,திறமைக்கும் ஏற்ற வேலையுடன் Madura Travel Service (P) Ltd ல் பணியில் அமர்ந்தேன் , எப்பொழுதும் போல் என்னால் இயன்றவற்றை தொடர்ந்து செய்தேன் கண் தான முகாம், உடல் தான பதிவு , மிர்ச்சியில் இது குறித்து அண்ணன் Mirchi Krishna உடன் உரையாடல் , ஆண்டு இறுதியில் பள்ளி , கல்லூரிகளில் நேர்காணல், தொடர்ந்து இதே வேகத்தில் 2014ம் பிறந்தது இன்றுவரை இவ்வேகம் இதே சீருடைன் செல்கிறது இதே பணிகளுடனும் . சில பணிகள் ஜவ்வ்வ்வ்வ்வ்வென இழுக்கின்றன அவற்றை விரைவில் துவங்கிவிடுவேன் Sriharan Balan அண்ணன் துணையுடன் , பறந்து விரிந்துள்ள இச்சமூகத்தில் நான் என்னால் இயன்றஅளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறேன் என்பதில் மிக்க...