Posts

Showing posts from July, 2013

இதுவும் காதலே

Image
கிடைக்காத ஒன்றின் மீதே இந்த மனது ஆசை வைக்கும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை.  என் ஆசை இன்னும் சற்று ஆழமானது , கண்களுக்கு எட்டியது கைகளுக்கு எட்டாது  போனால் அதன் வேதனை சொல்லில் அடங்காது.  என்ன பிழை செய்துவிட்டேன் என்று தெரியவில்லை  இந்த இயற்கை என்னை ஏனோ ஒதுக்கி விட்டது... பள்ளி விட்டு வீடு திரும்புகையில் ஒரு நாள் மழையில் நினைந்தேன் , அதன் பின் இன்றுவரை எந்த மழையும் என்னை தீண்டியதில்லை , செயற்கையின் சிறையில் , ஓர் தனி அறையில் , அடைபட்டு கிடக்கும் என்னை தேடி வரும் அடைமழையின் ஓசை இயற்கையின் ஒப்பாரியாகவே ஒலிக்கிறது இன்றும் என் ஜன்னல் ஓரத்தில் .  பல் துலக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பளிச்சென்று பூத்து என்னை பார்த்து சிரிக்கும் பூவின் மென்மையை உணர ஆசை பட்டு இன்றுவரை ஏக்கமாகவே எஞ்சி இருக்கிறது என்னுள் ,  எல்லோருக்கும் குறிஞ்சி மலர் அதிசயம்  ஆனால்  தினம் பூத்து தினம் உதிரும் மலரோடு  உதிர்ந்த பூவும்,  உலர்ந்த இதழ்களும் கூட எனக்கு அதிசயமே . விவரம் தெரிந்த அன்று முதல் இன்னும் என் பாதங்கள் பூமா...

யூகமும் - உண்மையும் (உலக சினிமா)

Image
உலக திரைப்படங்கள் பாக்குறது என் எண்ணற்ற கனவுகள்ள ஒன்னு , இந்த முறை நான் பாக்கபோற படங்கள் பத்தின என் என்ன ஓட்டங்கள இப்போ பாக்கலாம்... டிரெயிலர் பாத்து ஒரு உலக படத்த எப்படில்லாம் அணுகலாம்... மொதல்ல Buried இந்த படத்தோட டிரெயிலர் பாத்தீங்கன்னா எதுமே இல்லாமா ஒரு பிளான்க் ஸ்கீரீன் அதுல திகில் நிறைந்த ஒரு ஆளோட மூச்சிரைக்குற சத்தம் கேக்குது, அநேகமா அவர யாராவது தொரதுராங்கன்னு நினைக்குறேன் , அடர்த்தியான இருள், டிரெயிலர் முழுக்க ஒரே கதாபாத்திரம் , மெல்லிய மௌனம், திகில் நிறைந்த நிசப்தம், எமேர்ஜன்சி கால்ல நீங்க எங்க இருக்கீங்கன்னு அந்த கதாபாத்திரத்துக்கு கேக்க அவருக்கு எதுமே தெரியல... திரைல எதுமே இல்ல ஆனா இதுல ஏதோ ஒரு ஆழமான ஈரப்ப உணர்ந்தேன் . இப்போதைக்கு டிரெயிலர் படம் பாத்துட்டு இன்னும் எழுதுறேன் .                                                   ------- அடுத்தது Forrest Gump இதை தான் படிக்கணும், இந்த வேலைக்குதான் போகணும் அப்படின்னு இல்லாம, வாழ்கை சம்பவங்களை...

ஸ்பிலிட் பர்சனாலிட்டி

சந்திரமுகி-அந்நியன்-முப்பொழுதும் உன் கற்பனைகள் மேற்கூறிய இந்த மூன்று படங்கள்தான் தமிழில் நான் கண்ட உளவியல் படங்கள் 'டேய் டேய் நிறுத்து என்ன விமர்சனமா ' 'கிட்டத்தட்ட அப்படிதாங்க.. 'ஹ்ம்ம்... நீ எழுத கூடாது' 'ஏன் ஏன் ஏன் ' 'ஏன்னா எழுத்தாளன் இல்ல நீ' 'அப்பறம்...' 'அது உன் ஆழ்மனசு ஆசை அவ்வளவே' 'ஏய்...' 'சொல்லுடா ரமணா விஜயகாந்த்க்கு டூப் போட்டவனே' 'ங்கே...' 'அஞ்சு, அஞ்சு பைசா, அஞ்சு பேர் , அஞ்சு கோடின்னு பெனாத்த்துனவன் தானே நீ..' 'நேக்கு நீங்க பேசுறது எதுமே புரியலையே' 'ஆடுனா புரியுமா' 'எனக்காக வாரம் முழுசும் அவ காத்திருப்பா ' 'எங்க...' 'பெங்களூர்ல...' 'அப்போ அந்த நாட்டியக்காரி...' 'ஹஹஹஹா... ஹாஹாஹா.. லகலகலக...' 'டேய்....' 'என்ன பயந்துட்டியா...' 'யார் நீ...' 'கிறுக்கன் டா.' (படிச்சு எதுனா புரிஞ்சா , என்ன புரிஞ்சுதுன்னு கமென்ட் பண்ணுங்க )

படித்ததில் பிடித்தது

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப ...

ஏங்குகிறேன் ஏங்குகிறேன்

பள்ளி பேருந்தின் படிக்கட்டில் பரபரத்த காலோடு அவன் காத்திருந்தான் பேருந்தின் வேகம் குறைந்து அது நிற்க ஆயத்தமானது பரபரத்த கால்கள் படிக்கட்டை இருண்டு தட்டு தட்டின... பேருந்து நின்ற மறுகணம் குடியிருப்பு பகுதிகளில் குதித்துக்கொண்டே  சென்று வீட்டு வாசலில் அவன் ஆளுயர பையை தொப்பென வைத்து பாதம் தரையில் படாமல் பறந்தடித்து ஓடினான் பந்து விளையாட இதை பார்த்துகொண்டிருந்த தாய்க்கு கோபம் பீரிட்டு பொங்கியது மாடியில் இருந்து இரண்டு முறை கத்தி அழைத்தால் அது காற்றோடு மட்டுமே நின்றது அவன் காதுகளுக்கு எட்ட வில்லை... அந்தி முழுதும் சாய்ந்துவிட்டது ஆனந்தமாய் விளையாடி வந்தவனை அன்னை வாசலிலேயே எதிர்கொண்டால் கண்களாலேயே மிரட்டிய அன்னையின் கண்களை மிரட்சியுடன் தயங்கி தயங்கி எதிர்கொண்டன  அவனது கண்கள் காரமாய் இரண்டு திட்டு , சூடாய் நான்கு ,ஐந்து அடிகள் அடுத்து தனக்கு நிகரான புத்தகப்பையை தரதரவென இழுத்துக்கொண்டு கண்களை கசக்கியபடியே உடைமாற்ற சென்றான் முகம் கழுவும்போதே திட்டும், அடியும் பாதி மறந்திருந்தது , உடைமாற்றி முடிக்குமுன் மூத்தவனும் வந்து சேர்ந்திருந்தான்... 'அம்மா' என்று சொல்லிக்கொண்டே ஆசை ஆ...

உதட்டு சாயம் !!!

Image
காலை தென்றல் அதன் ஈரமான காற்றின்  இனிமையான ஸ்பரிசம்  என் இமைகளை திறக்க  இமைகளோ...  நிலவிடம் மோகம் கொண்ட மேகங்களாய்  மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாய் அணைத்துக்கொள்ள  ஆர்பரித்து வந்த உன் நினைவுகள்  கண்களோடு கலக்கங்களை தர . . .  கனவுகளை கலைத்து  கருவிழி கசக்கி எழுந்தேன்  தென்றலென தீண்டியது நீ என புரிந்தேன்  கண்ணாடியில் முகம் பார்த்தபோது... என் கன்னத்தில் உன் உதட்டுசாயம் =========== On Spreaker http://www.spreaker.com/user/jagu/r2gkw On SoundCloud https://soundcloud.com/heart-breakking-jaguu/udhattuchchaayam On Youtube நன்றி...