Posts

Showing posts from June, 2013

மடல் !!!

Image
உன் உருவின் புறவெளியும் …! உன் மனதின் உள் வெளியும் வெறுமையாய்…! இல்லை இல்லை வெண்மையாய் ..! உன் மனதை பிரதிபலிக்கும் வெண்ணிறக் காகிதம் தனில் …! மென்மையின் உருவான மயிலிறகு கொண்டு …! அதனினும் அழகான பொன் நிற விரல்கள் ..! எதை எழுதுகின்றன ..?..! என்றோ ஒன்றாய் உடனிருந்து …! இன்று எங்கோ இருக்கும் தோழிக்கு மடலா ?..! அல்லது தங்கையின் திருமணத்திற்கென …! தங்கம் சேர்க்க திரை கடல் ஓடிய ..! தமையனுக்கு மடலா ..?..! உயர் கல்விக்கென தொலைவில் … இருக்கும் தம்பிக்கு மடலா..?..! உன் கண்ணில் ஏக்கம் தெரிய ...! ஏக்கத்தின் பிரதிபலிப்பாய்…! எழுத்துக்களை ஒரு கை வரைய … மறு கை ஏனடி உன் கன்னத்தை தாங்குகிறது..! காற்றோ முத்தமிட முடியாமல் ஏங்குகிறது ..! உன் ஏக்கத்தின் மர்மம் யார் அறியார் ..! உன் எழுத்தின் வடிவம் நான் அறியேன் ..! உன் மாமனுக்கே தெரியட்டும் ..! மடலின் மர்மம் ..! மடலை மடித்து மனதோடு … வைத்துக் கொள் ...! அது கொண்டு சேர்க்கும் … உன் மாமனிடம் ..! யாரிடமேனும் அகப்பட்டால் உயிர் அறுந்து நோகும்... ------------- At SoundCloud https://soundcloud....

RIP MJ

உலக இசை நாயகன்.. மைக்கேல் ஜாக்சன்! மைக்கேல் ஜாக்சன், 29.8.1958-ல் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். 10 குழந்தைகளில் ஏழாவது பிள்ளை இவர். தந்தை ஜோசப், கண்டிப்பானவர். ''நான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு அப்பாவின் கண்டிப்பும் ஒரு காரணம்'' என்பார் ஜாக்சன். ஜாக்சனுக்குப் பிடித்த கதா பாத்திரம், பினாசியோ. பொய் சொன்னால் மூக்கு நீளமாகிவிடும் அந்தக் கதா பாத்திரத்தை மிகவும் நேசித்தார். பல்வேறு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்தார். அவரின் பிடித்தமான வளர்ப்புப் பிராணி, பப்புல்ஸ் எனும் சிம்பன்சி. மிஸ்டர் டிப்ஸ் என்கிற பனி ஆடு ஒன்றையும் வளர்த்துவந்தார். ஐந்து வயதிலேயே அண்ணன்கள் நடத்திய, 'ஜாக்சன் பிரதர்ஸ்’ இசைக் குழுவில் பாடினார். அப்போதே நன்றாக நடனம் ஆடுவார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982. இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் 'ஈடி’ படத்திற்கான ஆடியோ கோர்வையைத் தன் குரலில் பதிவு செய்தார். இதற்காக கிராமி விருது கிடைத்தது. அதே ஆண்டு வெளிவந்த 'த்ரில்லர்’ ஆல்பத்திற்காக எட்டு கிராமி விருதுகளைப் பெற்றார். இது, இது வரை யாராலும்...

புதிய முயற்சி

Image
விரக்தியின் உச்சமான தனிமையில் நாம் என்றும் துணையாய் தேடுவது இசை... நம் இதயத்துடிப்பின் தாளம் இசை... சிறு பிள்ளையின் சிரிப்பு இசை... இளம் பெண்ணின் கொலுசு இசை... காதலின் மௌனம் இசை... மோகத்தில் முத்த சத்தம் இசை... செடி கொடியோடு காற்றின் காதல் இலை பேசும் இன்னிசை... விண்ணும் மண்ணும் உறவாட மழை பாடும் மெல்லிசை... பாடும் குயிலின் உருவம் யாரரியார் அதுபோலே இசையும்... பிறக்கும் உயிரின் அழுகை இசை... பிரியும் உயிரின் பேரமைதி இசை... ரசனையின் உச்சம் இசை... உலக இசை தின நல்வாழ்த்துக்கள்... -------- இது உலக இசை தினத்துக்காக நான் எழுதின கவிதை , இந்த கவிதை பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை . உலக இசை தினத்தன்னிக்கு இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்லி ஆகணுமேன்னு http://www.spreaker.com/ வலைதளத்துல என் சேனல்ல பேச ஆரமிச்சேன் , ஏற்கனவே ரெண்டு மூணு நிகழ்ச்சி பண்ணியிருந்தாலும் கொஞ்சம் அதிக கால இடைவெளி விழுந்துட்டதாள வார்த்தைகள் கோர்வையா அமையல , சரி எத பேசணுமோ அத எழுதிவச்சிட்டு பேசுவோம்ன்னு எழுத ஆரம்பிச்சேன் அதுவும் சரியா வரல அப்போ வந்ததுதான் இந்த கவிதை... இந்த வரிகளுக்கு பம்பாய்...

என் எழுத்துக்களின் உயிர்

Image
உன்னை காணும் வரை என் எழுத்துக்கள் யாவும் உயிர் பெறவில்லை என் எண்ணங்கள் யாவும் உயரவுமில்லை என் மனம் உறக்கத்திலிருந்து எழவில்லை பொன்னிற தூரிகையில் பூத்திட்ட புது சித்திரமோ என் விழிகள் கண்டிராத விசித்திரமோ மனதினை வருடி உயிரை திருடி என் வாழ்வில் வந்த புது உறவே உன்னை கண்ட மறு நொடியிலே என் எழுத்துக்கள் யாவும் பறக்கின்றதே உனக்காகவே காத்திருந்து என் மனமும் உறங்க மாறுகின்றதே ... உன்னை காணமல்  என் எழுதுகோல் பயனின்றி போயிருக்கும்..

அவளின் இதழ்

Image
என் விழிகள் மொய்க்கும் மது கிண்ணம் அவளின் இதழ் !!! பூக்களின் புன்னகை இவளின் புன்சிரிப்பில் தோற்று போகும் மலர்களின் மகாராணி அவளின் இதழ் !!! ஆயிரம் ஆயிரம் மொட்டுக்கள் மலர்ந்தாலும் என்றும் உதிராது அவளின் இதழ் !!! வருடிச்சென்ற தென்றலும் வாசம் காணாமல் வியந்துபோகும் மலிரினும் மென்மையானது அவளின் இதழ் !!! மௌனமாய் காதல் பேசுகையில் காதோடு கானம் பாடும் அவளின் இதழ் !!! கோவத்தில் வார்த்தைகள் தீ என தெறித்த போதும் குளிரினில் கதகதப்பாய் அவளின் இதழ் !!! வானவில்லின் வண்ணமெடுத்து வான தேவதை வரைந்த ஓவியம் அவளின் இதழ் !!! என் கன்னங்களில் முத்தமிட்டு முத்திரை பதிக்கும் உரிமை கொண்டது அவளின் இதழ் !!! என் மயக்கங்களின் முகவரி அவளின் இதழ் !!! என் உள்ளம் ஊமையாகும் தருணங்களில் எனக்காய் உரக்க பேசும் அவளின் இதழ் !!! அந்தி சாய்ந்த பொழுதில் ஆனந்த கீதம் பாடி அன்னையாய் அரவணைத்து அழகாய் தாலாட்டும்... அவளின் இதழ் !!!