எப்போது காதலன் ஆவேன்??

மண்ணில் வந்த வான் மதி இவளோ ? மலரில் வந்த தேன் துளி இவளோ ? புன்னகை பூத்தபோது .. புயலில் தான் பறந்தேனோ? ஆடை மறைத்த இடை அழகோ ? அள்ளி முடிந்த குழல் அழகோ ? கொஞ்சி பேசும் மொழி அழகோ ? என் நெஞ்சை செதுக்கிய விழி அழகோ .? உன் அழகை சொல்லி நான் கவிஞன் ஆகிவிட்டேன் உன் அன்பை அனுபவிக்க எப்போது காதலன் ஆவேன் ?