கன்னி தமிழில் வார்த்தைகள் தேடுகிறேன் என் கண்களில் உன் விழிகள் சங்கமித்த தருணத்தை கவி பாட .. பிறை நிலா நெற்றியிலே மின்னல் கீற்றாய்.. நெற்றி முடி அழகு ... என் இதயம் இடரும் விழி அழகு விழி மேல் வில் அழகு .. கனி போல கன்னம் அழகு .. கனி ரசம் பொங்கும் இதழ் அழகு .. கம்மல் தொங்கும் காது அழகு .. தங்க மங்கை கழுத்து அழகு தாவணி மறைத்த முன்னழகு .. தடுமாற வைக்கும் பின்னழகு .. கண்ணும் கண்ணும் சங்கமித்து காதல் கடல் பொங்கி விட்டது .. இவை அனைத்தையும் மிஞ்சி விட்டது .. கண்ணே உன்னை கண்டதும் . . குழந்தையாக மீண்டும் பிறந்து உன் கைகளில் தவழ்ந்திடவே ஏங்குது நெஞ்சம் .. ஏக்கத்தை புரிந்து கொள்வாயா கண்ணே .. உன் மடியி...
திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை “சுகாத்தியர்” என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது. சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார். ஔவையார் எழுதிய “மூதுரை” என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது. “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார். சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள்திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சு...
இட்லியை எஞ்சாய் செய்வது எப்படி ? (சைவம்) அது என்னடா தலைப்புல அடைப்புக்குறிகளுக்குள்ள சைவம் அப்படின்னு போட்டிருக்கேன்னு பார்க்கிறீங்களா... அது ஒண்ணும் இல்லைங்க இந்த பதிவுல நாம பார்க்க போறது சைவ சைட்டிஷ் காம்போக்களுடன் கூடிய இட்லி வகைகள் அப்போ அசைவம்னா தக்காளி தொக்கா என்று எண்ணாதீர்கள் அது தனி பதிவில் சரி இட்லியை எஞ்சாய் செய்ய துவங்கும் முன் அடிப்படையாக பரவலாகக் கிடைக்கின்ற சிலபல இட்லி வகைகளையும் அதன் செய்முறை கேட்டகிரி வாயிலாக மூன்று அல்லது நான்கு விதங்களாக பிரித்துக் கொள்வோம் அதன்பின்னர் இக்கட்டுரையின் முக்கிய பகுதிக்கு செல்வோம். இட்லி 1 : இட்லி குண்டான் என்று பரவலாக அறியப்படுகின்ற ஒரு பாத்திரத்தில் செய்யப்படுவது நீராவியில் வேக வைக்கும் பொழுது இட்லி மாவை நேரடியாக தட்டில் ஊற்றாமல் ஈரமான ஒரு துணியை தட்டில் பரப்பி அதில் இட்லி மாவை ஊற்றி தயார் செய்யப்படும். இட்லி 2 : மேற்சொன்ன இட்லி குண்டான் பாத்திரத்தில் செய்யப்படுவது போல தான் என்றாலும் நகர்ப்புறங்களில் இது சாப்பாடு செய்யும் குக்கருக்குள் வைத்து செய்யப்படுகிறது இதற்கு பெயர் குக்கர் இட்லி. குக்கருக்குள் வைக்கக் கூடிய சிறிய அளவி...
Comments
Post a Comment