Posts

Showing posts from March, 2013

நினைவுகள் . . .

Image
பக்கத்து வீட்ல பிரபு அண்ணா வைஷ்ணவி . . எதிர்த்த வீட்ல கிருபா. . அந்த குடியிருப்புலையே குட்டி பையன் என் நெருங்கின நண்பன் கிஷோர்.. எல்லாரு கூடையும் சேந்து இருந்த அந்த நாட்கள் நிச்சயமா பொக்கிசம்தாங்க.. அந்த மொத்த குடியிருப்புக்கும்.. இல்ல இல்ல அந்த தெருவுக்கே அலாரம் ஒன்னு இருக்குங்க கரெக்ட்டா  காலைல 7.05க்கு ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'ன்னு ஒரு சவுண்ட் அம்புட்டுதான் கும்ப கர்ணனே எந்திரிசுடுவாரு அவ்ளோ சத்தமா இருக்கும்.. அது வேற ஒன்னும் இல்ல நம்ம கிருபா அப்பாவோட வண்டி சத்தம் தான்.. ஒதைக்கும் பொது ரெண்டு டமால்' சவுண்ட் அப்பறம் ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. எவளோ தூக்கத்துல இருந்தாலும் எந்திரிச்சே தான் ஆகணும் நோ எக்ஸ்கியுஸ் .. கிருபாவோட அம்மா வேளாண் பல்கலைகழகத்துல வேலைல இருந்தாங்க அவங்கள பேருந்து நிறுத்தத்துல விட்டுட்டு வந்து கிருபாவ பிக்கப் பண்ணிக்குவாரு இதுக்குதான் அந்த ஆல் இந்தியா அலாரம் . நாலாவது முடிக்கறதுக்கு முன்னாடியே  அந்த ஏரியாவ விட்டு வேற ஏரியாக்கு மாற வேண்டிய கட்டாயம்.. பிரிவு அப்படிங்கற வார்த்த கூட அப்ப எனக்கு தெரியாது ஜாலியா புது வீட்டுக்கு போக...

நினைவுகள் . . .

Image
குட்டை பார்க்.. குப்புசாமி மருத்துவமனை .. மணி மேல்நிலை பள்ளி.. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்.. இது எல்லாத்தையும் விட மிக பிரபலமான ஒன்னு.. வுமன்ஸ் பாலிடெக்னிக் [மகளிர் தொழிற்கல்வி மையம்] இதெல்லாம் பாப்பநாயக்கன் பாளையம், சித்தாபுதூர் ஏரியாவின் அடையாளங்கள்.. அதுலயும் அசோகர் வீதி, ரொட்டி கடை வீதி . . மாவு மில் சந்து இதையெல்லாம் அடுத்தடுத்த  ஜென்மத்துலயும் மறக்க முடியாது.. மேல சொன்ன முக்கியமான இடங்களெல்லாம் தாண்டி.. ஒரு ரவுண்ட் டானா.. அப்பறம் இரண்டு நாலு ரோடு சந்திப்பு அப்பறம் ஒரு துர்கை அம்மன் கோவில் . . அதுக்கு ரொம்ப பக்கத்துல கபாலி மாஸ்டர் புகழ் லக்ஷ்மி பரோட்டா ஸ்டால்.. [அவ்வவ் எழுதும் போதே எச்சில் ஊருது] இதெல்லாம் தாண்டினா அட்டகாசமா கண்ணுல படும் அப்போதைய பிக் பஜார் .  .  . வேல் முருகன் ஸ்டோர் [அந்த குட்டி  ஏரியால இது கொஞ்சம் பெரிய கடைதான் பாஸ்] அதையும் கிராஸ் பண்ணி போனா வர்ற முதல் வலது கட்டுல உள்ள போறோம்.. ரோம்பலாம் போகவேண்டாம் ரைட் கட் பண்ண உடனே ஒரு பத்தடி தூரத்துல ஒடஞ்சும் ஒடயாமையும்.. சிதைஞ்சும்  சிதையாமையும் இருக்குற ஒரு கறமுர கதவு உங்கள கீறல்களுடன் இனிதே...

மனிதம்

உலகின் ஒரு கோடியில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மேல் அதுவும் மிகச்சிறிய ஒரு சமூகத்தின் பொருட்டு வல்லரசு ஆன நாடுகள் முதல் வல்லரசு ஆக துடிக்கும் நாடுகள் வரை இவர்களை வைத்தே அரை நூற்றாண்டு காலம் அரசியல் நடத்தி ஆகி விட்டது. . என்ன ஆகி விட்டது.. என்கிறீர்கள்?? அப்படியானால் எல்லாம் முடிந்து விட்டதா.. ?? ஆம்.. முடிந்துதான் விட்டது.. அனைவரையும் தான் கொன்று விட்டோமே..  அப்படியானால் எஞ்சியவர்கள்..  ஆஹா.. அவர்களெல்லாம் நாட்டை விட்டு ஓடியவர்கள்..  அவர்களில் மிஞ்சியவர்கள்..  மிஞ்சியவர்களா??? அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லையே..  அதாவது அண்டை நாடுகளுக்கோ, அயல் நாடுகளுக்கோ.. போகாதவர்கள்.. அவர்கள் அனைவரும் கைதிகள் . . .  கைதிகளா?? ஆம்.. அப்படியும் சொல்லலாம்..  ஆ... ஒன்றுமே புரியவில்லை . .  உலக அரசியல் அப்படித்தான் இருக்கும்.. பல தலைமுறை தாண்டி வந்தவர்களுக்கே இது விளங்காது..  ஆனால் நாளைய தலைமுறையினருக்கு ஏதோ பொறி தட்டி இருக்கிறது போலும்..  என்ன.. நாளைய தலைமுறையினரா..  ஆம்.. ஆம்..  ...