நினைவுகள் . . .

பக்கத்து வீட்ல பிரபு அண்ணா வைஷ்ணவி . . எதிர்த்த வீட்ல கிருபா. . அந்த குடியிருப்புலையே குட்டி பையன் என் நெருங்கின நண்பன் கிஷோர்.. எல்லாரு கூடையும் சேந்து இருந்த அந்த நாட்கள் நிச்சயமா பொக்கிசம்தாங்க.. அந்த மொத்த குடியிருப்புக்கும்.. இல்ல இல்ல அந்த தெருவுக்கே அலாரம் ஒன்னு இருக்குங்க கரெக்ட்டா காலைல 7.05க்கு ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'ன்னு ஒரு சவுண்ட் அம்புட்டுதான் கும்ப கர்ணனே எந்திரிசுடுவாரு அவ்ளோ சத்தமா இருக்கும்.. அது வேற ஒன்னும் இல்ல நம்ம கிருபா அப்பாவோட வண்டி சத்தம் தான்.. ஒதைக்கும் பொது ரெண்டு டமால்' சவுண்ட் அப்பறம் ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. எவளோ தூக்கத்துல இருந்தாலும் எந்திரிச்சே தான் ஆகணும் நோ எக்ஸ்கியுஸ் .. கிருபாவோட அம்மா வேளாண் பல்கலைகழகத்துல வேலைல இருந்தாங்க அவங்கள பேருந்து நிறுத்தத்துல விட்டுட்டு வந்து கிருபாவ பிக்கப் பண்ணிக்குவாரு இதுக்குதான் அந்த ஆல் இந்தியா அலாரம் . நாலாவது முடிக்கறதுக்கு முன்னாடியே அந்த ஏரியாவ விட்டு வேற ஏரியாக்கு மாற வேண்டிய கட்டாயம்.. பிரிவு அப்படிங்கற வார்த்த கூட அப்ப எனக்கு தெரியாது ஜாலியா புது வீட்டுக்கு போக...