Posts

Showing posts from April, 2019

பத்தரமா பாத்துக்கோங்க

Image
          உங்களுக்கு ஒருவன் ஒரு புதிய இசையை அறிமுகப்படுத்தி வைக்கிறான் என்றால் அவனை ஏனைய நண்பர்களோடு சேர்த்து பத்தோடு பதினொன்றாக வைத்து விடாதீர்கள் என்று சொல்கிறது ஒரு உளவியல் சித்தாந்தம் / கோட்பாடு. இப்படியான ஒரு கோட்பாட்டை யார் சொன்னார்கள் எதற்காக சொன்னார்கள் எந்த தருணத்தில் இதை சொன்னார்கள் என்றெல்லாம் தெரியவில்லை அல்லது இப்படி ஒரு சித்தாந்தமும் கோட்பாடும் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை ஆனாலும் இந்த சித்தாந்தம் சொல்ல வரக்கூடிய கருத்து என்பது மிக ஆழமானதாக இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது. இசை என்பது நமது நெஞ்சத்தை அறுத்தோ அல்லது பிளந்தோ செல்லாமல் நேரடியாக இதயத்தை தொடக் கூடிய ஒரு விஷயம்... இதயம் வெறுமனே ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கின்ற ஒரு இயந்திரம் அவ்வளவுதான் என்று சொல்லக்கூடிய நபர்கள் தம்மை சுற்றி நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படியானவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால் இசை என்பது நீங்கள் நினைக்கக் கூடிய அந்த இயந்திரத்திற்கானது அல்ல... அது மனதிற்கானது...  மனது என்பது எங்கே இருக்கிறது இதயப்பகுதியிலா அல்ல...

சூப்பர் டீலக்ஸ் - Trailer Story Text Version

Image
ஒரு நாள் ஒரு ஆள்... மலைபாதைல தனியா போகையில திடீர்ன்னு அவன ஒரு புலி தொறத்துச்சுன்னா... ஒரு நாள் ஒரு ஆள்... மலைபாதைல தனியா போகையில புலி அவன திடீர்ன்னு தொறத்த... அவன் ஒளிய எடமில்லாம் ஓட ஓட புலி அவன நெருங்க நெருங்க அவன் மேடு ஏறி அந்தப்பக்கம் பாஞ்சா... அந்த சரிவுல ஒரு மரம் இருந்தா? அவன் இலைய விட்டு கிளைய விட்டு கடசில கைல சிக்குன கொடிய புடிச்சு தொங்குனா (எனக்கு பயமாயிருக்கு ராமசாமி) கீழ குதிக்கலாம்ன்னா அதல பாதாளம்... மேல புலி காத்திருக்கு... சரி இங்கயே இருப்போம்ன்னு அவன் நினைக்கிறப்போ அந்தக்கொடி மெல்ல அவன வளைச்சு அவன இறுக்குனா... அந்தக்கொடி மலைப்பாம்புன்னு தெரிஞ்சிசுன்னா... ஒரு நாள் ஒரு ஆள புலி தொறத்த அவன் ஓட ஒளிய எட்மில்லாம மேடதாண்டி சர்வுல பாஞ்சா அங்க மரமிருந்து இலைய விட்டு கிளைய விட்டு கடைசில சிக்குன கொடிய புடிச்சு தொங்க அந்தக்கொடி பாம்புன்னு தெரிய மேல புலி கீழ பள்ளம் அங்கயே இருக்கலாம்ன்னாலும் மலைப்பாம்பு முழுங்கிடும் என்னடா எழவு வாழ்க்கைன்னு அவன் மேல பாக்க... அந்ங்க ஒரு தேன்கூடு இருந்துச்சுன்னா... அதிலருந்து ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒழுகி அவன் ...