பத்தரமா பாத்துக்கோங்க

உங்களுக்கு ஒருவன் ஒரு புதிய இசையை அறிமுகப்படுத்தி வைக்கிறான் என்றால் அவனை ஏனைய நண்பர்களோடு சேர்த்து பத்தோடு பதினொன்றாக வைத்து விடாதீர்கள் என்று சொல்கிறது ஒரு உளவியல் சித்தாந்தம் / கோட்பாடு. இப்படியான ஒரு கோட்பாட்டை யார் சொன்னார்கள் எதற்காக சொன்னார்கள் எந்த தருணத்தில் இதை சொன்னார்கள் என்றெல்லாம் தெரியவில்லை அல்லது இப்படி ஒரு சித்தாந்தமும் கோட்பாடும் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை ஆனாலும் இந்த சித்தாந்தம் சொல்ல வரக்கூடிய கருத்து என்பது மிக ஆழமானதாக இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது. இசை என்பது நமது நெஞ்சத்தை அறுத்தோ அல்லது பிளந்தோ செல்லாமல் நேரடியாக இதயத்தை தொடக் கூடிய ஒரு விஷயம்... இதயம் வெறுமனே ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கின்ற ஒரு இயந்திரம் அவ்வளவுதான் என்று சொல்லக்கூடிய நபர்கள் தம்மை சுற்றி நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படியானவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால் இசை என்பது நீங்கள் நினைக்கக் கூடிய அந்த இயந்திரத்திற்கானது அல்ல... அது மனதிற்கானது... மனது என்பது எங்கே இருக்கிறது இதயப்பகுதியிலா அல்ல...