Posts

Showing posts from March, 2019

Dr. Padmashri. R.V.R அவர்களுக்கு பாராட்டுவிழா

Image
எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்காக ஊரே ஒன்று கூடி விடும் என்கின்ற பெருமை கோயம்புத்தூருக்கு எப்பொழுதும் உண்டு. இதோ இந்த நிகழ்வும் அப்படியான ஒன்றாகத்தான் நிகழ்ந்தது. சங்கரா கண் வங்கி கண் மருத்துவமனை துவக்கி சுமார் கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் பல்வேறு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அத்தனை விதமான மக்களுக்கும் கண்பார்வை சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் மருத்துவர் திரு. ஆர்.வி. ரமணி அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கபட்டு கௌரவிக்கப்பட்டதை வாழ்த்தவும் கொண்டாடும் விதமாகவும் கோயம்புத்தூர் மக்களாலும் கோயம்புத்தூரை சேர்ந்த 42க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள். மருத்துவரிடம் "பத்மஸ்ரீ விருது என்பது ஒருபக்கம் இருந்தாலும் அன்றாடம் இப்பணியில் உங்களை ஊக்குவிக்ககூடிய வெகுமதி என்று நீங்கள் எதை எண்ணுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் அங்கிருந்த அத்துனை பேரின் மனதிலும் ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் உந்துதலையும் ஏற்படுத்தியது...

மீள்வதென்பதும் தொலைவதே

சில ஆண்டுகளுக்கு முன்பாக யானை டாக்டர் என்கின்ற நூல் வழியாகத்தான் ஜெயமோகன் அறிமுகமானார்... அதன் பின்னர்தான் யானைடாக்டர் என்பது ஒரு தனி படைப்பு அல்ல அது அறம் என்னும...

இயலும் - துவக்கவிழா

மார்ச் 6, 2019 அன்று கோவை குமரகுரு கல்லூரியில் ABLE CLUB எனும் சங்கத்தை துவக்கியுள்ளனர். துவக்க விழாவின் முக்கிய அம்சமாக panel discussion என்று சொல்லப்படக்கூடிய கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த panel discussion-ல் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நான் பங்குபெற்று பேசினேன். திருநங்கைகள் வாழ்வியல் சூழலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் சகோதரி அமைப்பின் நிறுவனத்தார் மற்றும் எழுத்தாளர் கல்கி அவர்களையும். யாசகர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கி விட வேண்டும் என்று துடிப்போடும் கனவோடும் அக்ஷயம் அறக்கட்டளையை உருவாக்கி இயங்கி வரும் நவீன் அவர்களையும் சந்தித்துப் பேசி ஊக்கமும் உற்சாகமும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்த கலந்துரையாடல் மூலம் எனக்கு கிடைக்கப்பெற்றது. மிக அற்புதமான ஆசிரியர் திரு. பிச்சைமுத்து அவர்கள் இந்த கலந்துரையாடலை நெறியாளுகை செய்தார். இப்படி ஒரு கிளப் ஏன் உருவாக வேண்டும்? இதில் இணைந்து கொள்வதன் மூலம் சமூகத்தில் எத்தகைய ஒரு மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்? சிந்தனையில் கொள்வதெல்லாம் சரிதானா அல்லது சற்றே மாற்றிக் கொள...

அன்பும் அறிவும் ஆற்றலும்

கடந்த மாதத்தின் கடைசி நாள் அதாவது பிப்ரவரி மாதம் 28ம் தேதி, சிங்காநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய KSG கலை அறிவியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை நடத்திய தேசி...