Dr. Padmashri. R.V.R அவர்களுக்கு பாராட்டுவிழா

எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்காக ஊரே ஒன்று கூடி விடும் என்கின்ற பெருமை கோயம்புத்தூருக்கு எப்பொழுதும் உண்டு. இதோ இந்த நிகழ்வும் அப்படியான ஒன்றாகத்தான் நிகழ்ந்தது. சங்கரா கண் வங்கி கண் மருத்துவமனை துவக்கி சுமார் கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் பல்வேறு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அத்தனை விதமான மக்களுக்கும் கண்பார்வை சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் மருத்துவர் திரு. ஆர்.வி. ரமணி அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கபட்டு கௌரவிக்கப்பட்டதை வாழ்த்தவும் கொண்டாடும் விதமாகவும் கோயம்புத்தூர் மக்களாலும் கோயம்புத்தூரை சேர்ந்த 42க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள். மருத்துவரிடம் "பத்மஸ்ரீ விருது என்பது ஒருபக்கம் இருந்தாலும் அன்றாடம் இப்பணியில் உங்களை ஊக்குவிக்ககூடிய வெகுமதி என்று நீங்கள் எதை எண்ணுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் அங்கிருந்த அத்துனை பேரின் மனதிலும் ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் உந்துதலையும் ஏற்படுத்தியது...