Posts

Showing posts from November, 2014

பொதிகையில் ஒரு பொன் மாலை பொழுது.

Image
அன்றைய தினம் எப்பவும்போல நான் அலுவலக பணிகளை துவங்கி இயங்கிக்கொண்டிருந்தேன், ராகுல் வந்தார். திருநங்கை ப்ரியா பாபு கோவை வருவதாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருப்பதை சொன்னார். சாதனையாளர் ஒருவர் நமது ஊர் வந்திருக்கிறார் நிச்சயம் சந்திக்கவேண்டுமென தீர்மானித்தோம். ராகுல் அக்காவிற்கு போன் செய்தார், அக்கா பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருப்பதாக சொன்னார். அக்காவை வீட்டிற்கு அழைத்துவர யோசித்து பின் நாங்களே அங்கு சென்றோம். அங்கு நடந்தவை இதோ உங்களுக்காக. நெகிழ்ச்சியான உரையாடல் தொடர்ந்து வாசுகியின் ஆச்சர்யமூட்டும் அழகான பாடல் இசைஞானி இசைக்க மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடியிருக்கும் தர்மயுத்தம் பட பாடலான ஆகாய கங்கையை இருவரது குரலிலும் பாடி பிரமிப்பூட்டினார் வாசுகி... குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்... 20/11/2014 வெ.கி .ஜெகதீஷ் 

நானும் நாகராஜும்

ஊர் பேர் தெரியாத ஏதோ ஓர் சினிமா அது. அதில் யாரோ யாரையோ 'டேய் சாவுக்கிறாக்கி' என்பார் உடனே இவர் ஆமா இவர் மட்டும் தான் வாழுறகிறாக்கி பாரு என கவுன்ட்டர் அடிப்பார். நான் மிகவும் ரசித்த பல கவுன்ட்டர்களில் இதுவும் ஒன்று... மரியாதைன்னா அது கோயம்புத்தூர் தான்பா என பலர் சொல்வதுண்டு. அப்போ மதுரை திருநெல்வேலி எல்லாம் மருவாதி இல்லாத ஊரானு எல்லாம் கேக்கபடாது இப்போ மேட்டர் அதில்ல. கோயம்புத்தூர்ல நாகராஜ் நாகராஜ்ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மனைவி பேரு சகுந்தலா. அப்பறம் முத்து முத்தா மூனு பெண் கொழந்தைங்க கிரிஜா, வனஜா, லக்ஸ்மி . நாகராஜ் அடிப்படைல ஒரு கால்பந்தாட்ட வீரர் மற்றும் மிகச்சிறந்த கோட்டோவியக்காரர். ஆனா அன்றைய சூழல்ல இத ரெண்டும் வச்சு புவ்வா பத்தி நெனச்சு கூட பாக்கமுடியாது அதனால பிரபல ராதாகிருஷ்ணா மில்லுக்கு போக ஆரம்பிச்சாரு. அதுக்கப்பறம் அந்த மில்லுதான் எல்லாமே... அங்க வேலை செஞ்சுதான் பொண்ணுங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணி வச்சு பேரன் பேத்தி எடுத்து மாஸ் காட்டிட்டாரு. சகுந்தலா நாகராஜ் பார்ட்னர்ஷிப் செம்ம ரெண்டு பேருக்கும் இடைல அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. நாகராஜ் சகுந்த...

இளையராஜா, கமல், அப்பா, நான்.

ஆண்டு அவ்வளவாக நினைவில்லை ஆனால் நான் இரண்டு/மூன்றாம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்தேன் பள்ளி பாப்பநாயக்கன் பாளையத்தில் வீடு சிங்காநல்லூரில் சற்று நீநீநீநீநீநீநீநீநீண்ட தூர பயணம்தான் சைக்கிளில் தான் பிக்கப் அன்ட் டிராப். பள்ளியில் இருந்து வீடு போகும்போது, ராஜா பாடல்கள் இன்றி அப்பா சைக்கிளை மிதிக்கமாட்டார். ரஜினி, மோகன், என மற்ற நடிகர்களின் பாடல்களை தாண்டி அப்பா பாடும் லிஸ்டில் அதிகம் கமல் & ராஜா காம்போ தான் இருக்கும். ஐ.... கமல் பாட்டு என்று தான் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தேன்... சாரி ராஜா சார்... அப்பாவின் பாடல் லிஸ்ட் அலாதியானது. சலங்கை ஒலியின் - இது மௌனமான நேரம், தகிட ததிமி, வறுமையின் நிறம் சிவப்பின் - சிப்பி இருக்குது முத்து இருக்குது சகலகலா வல்லவனின் - இளமை இதோ இதோ... ராஜபார்வை, புன்னகை மன்னன் எனத்தொடரும் அப்பாவின் தேர்வுகள் எல்லாமே ரொம்பவே ரொமாண்டிக் ஆனவை. நினைத்தாலே இனிக்கும் படத்தை கதையாகவே என்னிடம் நிறையமுறை சொல்லி இருப்பார். அப்பா நிச்சயம் எனக்குள்ள ஒரு கமல உணர்ந்திருப்பாருன்னு ஃபீல் பண்றேன். இதுலாம் உனக்கே ஓவரா இல்லையான்னு நீங்க கேக்கலாம் ஆனா அதான் உண்மை....