கலரு
மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களின் போதுதான் எனக்கு பெப்சி,கோலா போன்ற பண்ணாட்டு கம்பெனிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது, அதுவரை அவ்வப்போது அருந்திக்கொண்டு இருந்த நான் அதன்பின் பெரிய 'நோ' சொல்லிவிட்டேன். போராட்ட களத்தில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ஐ.நா வில் இந்தியாவின் நிலைப்பாடு அறிந்தபின் நாங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி பதினொரு நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கினோம். புகைப்பட கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டு செயல்பட்டோம், பல்வேறு மாவட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்தினர், அந்த நிகழ்ச்சியில் ஒரு மேடை நாடகமும் ஏற்பாடு செய்திருந்தோம். சட்டக்கல்லூரி மாணவி தோழர் கனிமொழி எழுதி இயக்கினார். சர்வதேச அரசியல் எவ்வாறு பண்ணாட்டு நிறுவனங்களின் இஷ்டப்படி வளைந்து நெளிந்து உலக நாடுகளின் வளர்ச்சி, மற்றும் வீழ்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதே நாடகத்தின் ஒன் லைன். இதில் நான் கருணாநிதி வேடம் ஏற்று நடித்தேன். இது நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன். சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒருங்கிணைத்த நிகழ்வுக்கு சென்றிருந்த...