Posts

Showing posts from October, 2014

கலரு

மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களின் போதுதான் எனக்கு பெப்சி,கோலா போன்ற பண்ணாட்டு கம்பெனிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது, அதுவரை அவ்வப்போது அருந்திக்கொண்டு இருந்த நான் அதன்பின் பெரிய 'நோ' சொல்லிவிட்டேன். போராட்ட களத்தில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ஐ.நா வில் இந்தியாவின் நிலைப்பாடு அறிந்தபின் நாங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி பதினொரு நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கினோம். புகைப்பட கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டு செயல்பட்டோம், பல்வேறு மாவட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்தினர், அந்த நிகழ்ச்சியில் ஒரு மேடை நாடகமும் ஏற்பாடு செய்திருந்தோம். சட்டக்கல்லூரி மாணவி தோழர் கனிமொழி எழுதி இயக்கினார். சர்வதேச அரசியல் எவ்வாறு பண்ணாட்டு நிறுவனங்களின் இஷ்டப்படி வளைந்து நெளிந்து உலக நாடுகளின் வளர்ச்சி, மற்றும் வீழ்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதே நாடகத்தின் ஒன் லைன். இதில் நான் கருணாநிதி வேடம் ஏற்று நடித்தேன். இது நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன். சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒருங்கிணைத்த நிகழ்வுக்கு சென்றிருந்த...

சுட்டிப்பெண்ணும் சுக்குட்டீயும்

அன்றைய தினம் வர்ணங்களால் ஆனது, கோரல் டிராவையும், போட்டோசாப்பையும் தாண்டி பல வர்ணக்கலவைகளை நண்பர்கள் கலர் கோல பொடிகள் கொண்டு செய்துகொண்டு இருந்தார்கள். அவற்றை கொண்டு கோலங்களுக்கு வர்ணம் இட்டுக்கொண்டு இருந்தனர். கோலங்களை ரசித்தபடியும் வர்ணங்களை நண்பர்கள் மீது பூசியபடியும் நான் ஜாலி பண்ணிக்கொண்டு இருந்தேன்... அது கோவை  அருகே கருமத்தம்பட்டி உள்ளே  சில கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஒரு ஆசிரமம். 'பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்'  பாட்டி தாத்தாக்களுடன், பேரன் பேத்திகள் வாழும் ஓர் அழகிய சோலை அது. அப்பொழுது நேரம் பிற்பகலை தாண்டி போய்கொண்டிருக்க, ஒரு சுட்டிப்பெண் எல்லோருக்கும் எதையோ கொடுத்தப்படி வந்தாள், எனக்கு முன் இருந்த இரண்டு பாட்டிகள் ஆளுக்கொரு டம்ளர் எடுத்துக்கொள்ள சுட்டி என்னை தாண்டிச் சென்றால். (அப்போவே உசாரா ஆகிருக்கணும்) சிஸ்டர் எனக்கு டீ'ன்னு நிப்பாட்டுனேன் ' முகத்த தொங்க போட்ட்டபடி (வெட்கமாம்) என் முன்ன நின்னா அந்த சுட்டி, 'அட பிளாக் டீ' என்றேன்... 'அண்ணா சுக்கு டீ' ன்னு சொல்லியபடி வேறெங்கோ பார்த்தாள் 'அச்சோ சாதா டீ வேணும் இருக்கா?...