Posts

Showing posts from July, 2014

துணிச்சல் !

தனிமையில் காத்திருப்பது ஒரு சுகம்..! தனித்திருந்து காத்திருப்பது ஒரு சுகம்..! தனிமையில் காத்திருக்க பொறுமையின் தாராளம் வேண்டும், தனித்திருந்து காத்திருக்க துணிவின் ஏராளம் வேண்டும். பொறுமை இழந்து துணிந்து இருக்கிறேன்... எட்டி விடும் இடத்தில் இல்லை, தொலைதூரத்தில் என்னவள். விடியும் தருணம் விழிகள் காணும் உருவம் எனதுயிராய் இருக்கவேண்டும் என விழி மூடுகிறேன் ! விடியலை தேடி அல்ல... என் துணிவின் எல்லையை தேடி...!

பச்சை பூ!

என்னையே உலகென கொண்ட என் உலகம் ஒரு மஞ்சள் ரோஜாவை என் கையில் சேர்த்தது. கை, கால் முளைத்த இளஞ்சிவப்பு ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துகொண்ட போது மஞ்சள் ரோஜாவை அதனிடம் கொடுத்தேன். கோபித்து கொண்ட என் உலகம் பூ போன்றதொரு வேப்பிலை தொகுப்பொன்றை என் கையில் தந்தது. ஞானி ஒருவருடன் நடந்த அபிநய உரையாடலில் அதுவும் என் கை விட்டு போனது. மீண்டும் கோபித்துகொண்ட என் உலகம் மூன்றாவதாக . . . பெயர் அறியா பூ போன்ற இலை ஒன்றை கொடுத்தது. அக்கணம் முதல் என் உயிரின் கொஞ்சத்தை அந்த இலையில் உணர்ந்தேன். புத்திக்கு தான் அது இலை. இதயத்திற்கு அது பூ...

எல்லாம் மாயை

சுதந்திரம் என்பது வெறும் கனவல்ல... நம்மை சுற்றி நாமே போட்டு கொண்டிருக்கும் வேலிகளை தாண்டி தேடிக்கொள்வதே ஆகும். Gerald Di Pego என்பவரால கதை திரைக்கதை எழுதப்பட்டு Jon Turteltaub இயக்கி வெளிவந்த படம் 'தி இன்ஸ்டின்க்ட்' (The Instinct) இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் Dr. Ethan Powell (Anthony Hopkins) ஒரு anthropologist ( அப்படியென்றால் என்ன என்பதை கூகிள்,விக்கியில் தட்டி பார்த்து கொள்ளவும்) வேற்று நாட்டு வனப்பகுதியில் சில மனிதர்களின் மரணத்திற்கு இவர் காரணம் என அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் தாய் நாட்டு அதிகாரிகள் பிணையில் சொந்த ஊர் திரும்புகிறார். விமான நிலையத்தில் ஒரு சிறு சலசலப்பில் அவர் சற்றே பதற்றமடைய செய்வதறியாது சிலரை தூக்கி போட்டு பந்தாடி விடுகிறார். அவர் க்ரைம் ரேட் அதிகப்படியாக உயர அதி தீவிர கடுங்காவல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அவ்விடம் இருந்து மீட்டே தீருவேன் என்று அவரை அணுகுகிறார் ஓர் மனோதத்துவ நிபுணர் Dr. Theo Caulder (Cuba Gooding, Jr) பல வருடங்களாக சக மனிதர் யாருடனும் பேசாது பழகிவிட்ட ஈத்தன் இவரிடம் மெல்ல மெல்ல பேச துவங்குகிறார். ஒரு பேரு ப...

பசி.. !

நாம குழந்தையா பிறக்கும் போதிருந்து கொஞ்சம் வளர்ற வரைக்கும் பசிக்கும்போது பால் குடிச்சு வளருவோம், கொஞ்சம் வளந்ததும் சோறு மற்றும் இட்லி போன்ற மென்மையான உணவுகள் ஊட்டிவிடப்பட்டு வளரக்கப்படுவோம். அதுவும் நமக்கு எப்போ வேணுமோ அப்போ மட்டுமே, இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல இனிமே தான் ட்விஸ்ட். ஸ்கூல் அப்படிங்கற ஒன்னத்துக்கு போக ஆரம்பிச்சதும் டைமுக்கு சாப்பிடனும்ன்னு ஒரு ரூல் நம்ம வாழ்க்கைல புதுசா போடப்படும். அதுவரைக்கும் பசிச்சா சாப்பிட்டு பழகின நாம பசிக்கிதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட டைம்க்கு சாப்டே ஆகணும்ஙகற கட்டாயத்துக்கு தள்ளபடுறோம் அப்படியே படி படியா வளர வளர பாட சுமை அதிகமாகி பசி மறந்து மார்க் வேட்டைல எறங்கி டியூசன், ஸ்பெஸல் க்ளாஸ்ன்னு டைமுக்கு சாப்பிட்டு வந்த பழக்கத்துக்கும் ஆப்பு. நல்லா நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்டாதான் உடம்புல ரத்தம் ஊரும் . ரத்தம் நல்லா ஃப்லோல இருந்தாதான் மூளைக்கு ஆக்சிஜன் போகும் , ஆக்சிசன் போனாதான மூளை ஆக்டீவா இருக்கும். (ரத்தத்த தவிர பூஸ்ட் போர்ன்வீட்டா போன்ற எந்த பொருளாலும் நம்ம மூளை வளராது, மாற்றாக அந்த கம்பெனி காரணோட சொத்துக்கள் தான் வளரும் ) நம்ம ஊரு கொழந...