நாம குழந்தையா பிறக்கும் போதிருந்து கொஞ்சம் வளர்ற வரைக்கும் பசிக்கும்போது பால் குடிச்சு வளருவோம், கொஞ்சம் வளந்ததும் சோறு மற்றும் இட்லி போன்ற மென்மையான உணவுகள் ஊட்டிவிடப்பட்டு வளரக்கப்படுவோம். அதுவும் நமக்கு எப்போ வேணுமோ அப்போ மட்டுமே, இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல இனிமே தான் ட்விஸ்ட். ஸ்கூல் அப்படிங்கற ஒன்னத்துக்கு போக ஆரம்பிச்சதும் டைமுக்கு சாப்பிடனும்ன்னு ஒரு ரூல் நம்ம வாழ்க்கைல புதுசா போடப்படும். அதுவரைக்கும் பசிச்சா சாப்பிட்டு பழகின நாம பசிக்கிதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட டைம்க்கு சாப்டே ஆகணும்ஙகற கட்டாயத்துக்கு தள்ளபடுறோம் அப்படியே படி படியா வளர வளர பாட சுமை அதிகமாகி பசி மறந்து மார்க் வேட்டைல எறங்கி டியூசன், ஸ்பெஸல் க்ளாஸ்ன்னு டைமுக்கு சாப்பிட்டு வந்த பழக்கத்துக்கும் ஆப்பு. நல்லா நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்டாதான் உடம்புல ரத்தம் ஊரும் . ரத்தம் நல்லா ஃப்லோல இருந்தாதான் மூளைக்கு ஆக்சிஜன் போகும் , ஆக்சிசன் போனாதான மூளை ஆக்டீவா இருக்கும். (ரத்தத்த தவிர பூஸ்ட் போர்ன்வீட்டா போன்ற எந்த பொருளாலும் நம்ம மூளை வளராது, மாற்றாக அந்த கம்பெனி காரணோட சொத்துக்கள் தான் வளரும் ) நம்ம ஊரு கொழந...