Posts

Showing posts from December, 2013

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

Image
திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை “சுகாத்தியர்” என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது. சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார். ஔவையார் எழுதிய “மூதுரை” என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது. “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார். சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள்திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சு...

குக்கூ

Image
குக்கூ குழந்தைகள் வெளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அடியேன் கைப்பேசியில் எடுத்த படங்கள் இவை... வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நண்பரின் காரில் ஊத்துக்குளி நோக்கிய பயணம் இனிதே தொடங்கியது... நள்ளிரவு வாக்கில் குக்கூவை அடைந்த எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது ஆண்டுவிழாவை முன்னிட்டு குழந்தைகள் எழுதிய இயற்கை சாரந்த கட்டுரைகள் மற்றும் ஓவியங்களை அழகாக பிரித்து அடுக்கும் பணியை நானும் இன்னொரு அன்பரும் செய்ய துவங்கி முடித்தபோது உறக்கம் உச்சந்தலயை அழுத்தவே சிலமணி நேரம் உறங்கி எழுந்தோம் . இரண்டு மாதங்களாக காத்திருந்த அந்த காலை பொழுது இதோ விடிந்து வெளியே வா வா என்று என்னை அழைக்கிறது . அன்று மட்டும் என் விழிகள் உறக்கத்தில் இருந்து மீள எவ்வித சிரமமும் கொள்ளவில்லை , விழித்தேன் உற்சாகத்துடன் உடைமாற்றி அன்பு நண்பனை அழைக்க எனக்காக ஒரு இடத்தை தயார் செய்து சிலநொடிகளில் அவ்விடத்தில் என்னை பத்திரப்படுத்தினான் . . . பதனீர் கேழ்வரகு கொழுக்கட்டை ராகி கூழ் மற்றும் நொங்கை அடுத்தடுத்து ஆனந்தமாய் அனுபவித்தபடி இருக்க , நேசமும் அன்பும் அனைவருக்கும் எனும்படி நம்மாழ்வார் அய்யா வருகை தந்தார் ஒரு சிறு அறி...