பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை “சுகாத்தியர்” என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது. சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார். ஔவையார் எழுதிய “மூதுரை” என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது. “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார். சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள்திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சு...