Posts

Showing posts from August, 2013

பயனுள்ள இணைய தளங்கள்

தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்! சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-income.pdf C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ http://www.makemytrip.com/ http://www.ezeego1.co.in/ D. E-Payments (Online) 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி http://portal.bsnl.in/porta...

வெவ்வேறு அணிகள் அல்ல, ஒரே அணி

 உ ள்நாட்டு மக்களின் தேவைகளான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களை 14, 15 மணி நேரம் இருளில் மூழ்கடித்துள்ள பாசிச ஜெயா அரசு நாட்டின் செல்வங்களை எல்லாம் தட்டிக்கேட்பாரின்றி சூறையாடும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒரு நொடி கூட தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது. ம.க.இ.க உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்தும் அதற்கான காரணங்களை விளக்கியும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 10 தேதி தருமபுரியில் ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’ பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்குகின்ற தடையற்ற மின்சாரத்தை இரத்து செய் ! என்கிற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு வட்டக்குழு உறுப்பினர் தோழர் சிவா தலைமை தாங்கினார். தோழர் கோபிநாத்தும், முத்துக்குமாரும் கண்டன உரையாற்றினர்.  தோழர்கள் தமது உரையில். “உணவு, உடை உற்பத்தி விவசாயம், கைத்தறி, விசைத்தறி சிறு தொழில் நிறுவனங்களுக்கு 14 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தும் அரசு நோக்கியா, சாம்சங் போன்ற செ...

காத்திருக்கிறேன்

Image
என்னவள் எனக்கென எழுதுகிறாள் அவள் இதயத்தின் உணர்வுகளை விழிகளே வெளிப்படுத்திவிடும் எனும்போது விரல்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்னை எண்ணி எழுதும்போது எச்சரிக்கையாய் இரு என் ஏக்கத்தால் காகிதம் எரிந்திட போகிறது நீ எழுதும்... இல்லை இல்லை வரையும் கடிதத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன் காதல் சொல்ல தாமதிதாய் கண்கள் சந்திக்க தாமதித்தாய் கைகள் சேர தாமதித்தாய் கடிதத்தையும் தாமதித்து விடாதே காத்திருக்கிறேன் என் காதலை கண்களால் பருக

கொங்குநாட்டுக் கவிஞர் வெள்ளியங்காட்டானின் தமிழ்ப் பணி

படைப்பிலக்கியங்களில் படிப்போரின் மனதை எளிதாகவும் ஆழமாகவும் பற்றக்கூடியது கவிதை ''  இலக்கிய படைப்பாளரின் அனுபவம் முழுவதையும் அவர் நினைத்தவாறே வெளியிடுவதற்கு மிகச் சிறந்த வாயிலாக அமைவது பாட்டேயாகும்''. ' -  என்ற முனைவர் த.ஏ ஞானமூர்த்தி அவர்களின் கருத்துக்கேற்ப அமைந்தவை கவிஞர் வெள்ளியங்காட்டானின் கவிதைகளாகும். '' வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப் பெருக்கும் கலைப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் '' என பாரதியாரும், '' கங்கையை போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் '' கவிஞனின் உள்ளம் ஆகும். எனவே படைப்பாளர்கள் ஆகிய  எழுத்தாளர்களின் தமிழ்ப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்குடன் '' கொங்குநாட்டுக் கவிஞர்களில் '' பாரதிக்குப்பின் கவிஞன் இல்லை என்ற வாதம் தலை காட்டும் நேரத்தில் ''இதோ'' என்று எளிதில் சுட்டிக் காட்டத்தக்க வகையில் வெள்ளியங்காட்டான் அவர்கள் உயர்ந்து விளங்குகிறார் '' . புதுக்கவிதையின் தாக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் மரபுக்கவிதை நெறி பிற...