Posts

Showing posts from January, 2013

காதலித்துப்பார் !!!

Image
மெய் சிலிர்க்கும் மெல்லிய ஓசை !! அதை மெய் மறந்து கேட்டதுண்டா ?? உயிர் உருகும் தருணம் அதை உணர்ந்ததுண்டா ?? நாம் வாழும் இந்த பூமியின் பாசம் தான் புரிந்ததுண்டா ?? மொட்டரும்பும் மெட்டுச்சத்தம் மெல்ல ரசித்து கேட்டதுண்டா ?? விரிந்த மலரின் புன்னகையில் புன்சிரிப்பின் ஓசை கேட்டதுண்டா.. புல்லின் நுனியில் தவழ்ந்து . . மலரின் இதழில் விழுந்து... பட்டுத்தெறிக்கும் பனித்துளியின் தாளச்சத்தம் கேட்டதுண்டா ?? இயற்கையின் காதலை உணர்ந்ததுண்டா ? உன் நெஞ்சம் மகிழ்ந்து நிறைந்த்துண்டா ?? இதயத்தில் சங்கீதம் கேட்டதுண்டா ?? இமைகளில் இசைச்சரம் பார்த்ததுண்டா.. ? இதழ் பாடும் மௌன ராகம் ரசித்ததுண்டா ?? உன்னை பிரிந்த இதயத்தின் ஒப்பாரி கேட்டதுண்டா.?/ உயிர் உருகும்  உச்சத்தில்.. உன்னை நினைக்கும் நெஞ்சத்தின் உலகதிரும் ஓலம் அதை கேட்டதுண்டா ?? வழியின்றி வெற்றியில்லை.. காதலில் வலிமட்டுமின்றி  வேறில்லை..

கோலம் . . .

Image
பெண்ணை பெண் அலங்கரிக்கிறாள் . . தன்னை தானே அழகுபடுத்திக்கொள்வது போல . . கோலமிடுதல் பெண்மைக்கு அழகு பெண் குழந்தை கோலமிடுவதை பார்ப்பது கொள்ளை அழகு.தரையில் மட்டுமல்ல தன் முகத்திலும் சாயமிட்டுகொல்வார்கள். கோலமிடும் குழந்தையின் கைகளை அள்ளி கன்னங்களோடு பதித்துக்கொள்ள ஆசை . . நானும் அழகாகிவிட மாட்டேனா என்று வண்ண கனவை கோலமிடும் இக்குழந்தையின் பிஞ்சு கரங்களில் எப்படி சாத்தியமானது இந்த மாயாஜாலம்..??

உன்னை காணமல் இருந்திருந்தால்...

Image
உன்னை காணும் வரை என் எழுத்துக்கள் யாவும் உயிர் பெறவில்லை என் எண்ணங்கள் யாவும் உயரவுமில்லை என் மனம் உறக்கத்திலிருந்து எழவில்லை பொன்னிற தூரிகையில் பூத்திட்ட புது சித்திரமோ என் விழிகள் கண்டிராத விசித்திரமோ மனதினை வருடி உயிரை திருடி என் வாழ்வில் வந்த புது உறவே உன்னை கண்ட மறு நொடியிலே என் எழுத்துக்கள் யாவும் பறக்கின்றதே உனக்காகவே காத்திருந்து என் மனமும் உறங்க மாறுகின்றதே ... உன்னை காணமல் இருந்திருந்தால்  என் எழுதுகோல் பயனின்றி போயிருக்கும்