Posts

Showing posts from May, 2015

கர்சீப் சொல்லும் காதல் கதை

வழிய வழிய எண்ணை பூசியாகிவிட்டது தலைக்கு அம்மாவிற்ககாக, பேருந்து நிறுத்தத்தை அடைவதற்குள் வியர்த்து வழிந்து முகமெல்லாம் எண்ணெய் பிசுக்கில் இருக்கும் , நானும் அவளும் செல்லும் பேருந்து வரும்வரை பொருத்திருந்துவிட்டு பின் நண்பனின் சைக்கிள் கண்ணாடியில் முகம்பார்தப்படி பேன்ட் பாக்கெட்டில் கர்சீப்பினுள் பதுக்கிவந்த கோகுல் சாண்டாலை பூசி நிமிர சாலையோரம் ஒரு பேருந்து , அதில் ஜன்னலோரம் அவள் , அவள் விழியோரம் நான். இரண்டு முழம் மல்லியை இரண்டு , இரண்டாக மடித்து வைத்து நடுவில் ஒரு செண்பகப்பூ வைத்தால் அழகாய் இருக்கும் கருப்பு ரிப்பன் கட்டி பின்னப்பட்ட அவளது இரட்டை ஜடைக்கு , பிறை நெற்றி நடுவே தீபச்சுடரென ஸ்டிக்கர் பொட்டின் கீழ் எப்பொழுதும் ஒரு சிறு கீற்று திருநீறு எப்பொழுதாவது சந்தனம் , கண்கள் தாண்டாத கண்மை , மஞ்சளும் அல்லாது ரோஸும் அல்லாது ஒரு மங்களகரமான நீள்வட்ட முகம் அவளுடையது. அவளுக்கு மட்டும் ஒப்பனைகள் கலைவதில்லையே என்று நான் கோகுல்சாண்டால் பூசிக்கொள்ளும் போதெல்லாம் எண்ணியதுண்டு , பின் ஒரு நாள் கேண்டீனில் அவள் கர்சீப் கிடைத்தது (கிடைக்க செய்தேன்) மெல்ல பிரித்து பார்த்தேன் அதனுள் கோகுல் சாண்...