Posts

Showing posts from January, 2015

மழை...!

அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன், எங்கப்பா தான் என்ன பள்ளில விட்டுட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. அன்றைய நாள் வங்ககடல்ல இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கரையோரம் கரைய கடந்தபடியால ஊரெங்கும் பரவலா மழை. காலைமுதலே கருக்கலா இருந்த வானம் மதியப்பொழுதுல எல்லாம் இருட்டியே விட்ருச்சு, வகுப்புகள் நடக்கல, மைதானதுக்குபோக பயமா இருந்துச்சு. பள்ளிக்கு நேர் மேலே இதோ இந்தக்கணம் அத்தனை மழையையும் கொட்டி விடுவது போன்று திரண்டிருந்தன மேகமே விழுந்தாலும் ஆச்சரியமில்லை, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்டனர், வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களின் பெற்றோர் போன் செய்து வரவழைக்கப்பட்டனர். அப்பாவும் வந்தார் அதை நான் என் வகுப்பின் ஜன்னல்வழி பார்த்தேன், அப்பா என் வகுப்பை நெருங்கிய நொடி பெரும் இடியொன்று அணுவேடிப்பின் சத்தத்திற்கு ஒப்பான சத்தத்தோடு இடித்ததும் கொட்டத்துவங்கியது மழை. மழை கொஞ்சம் ஸ்லோவாகும் போய்விடலாம் என ஒன்னேகால் மணிநேரம் கடந்தும் மழையின் பொழிதலில் எந்த மாற்றமும் இல்லை பேரிரைச்சலோடும், பெருங்கொண்ட காற்றின் சத்தத்தோடும் தட்டியெடுத்தத...