முதன் முதலாய் !
2011 என் வாழ்விலும் மனத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டு... அந்த நாட்கள் முற்றிலும் வெறுமையானவை வறண்ட பிரதேசத்தில் நெருப்பு எறிவது போன்று ஓர் அமானுஷ்ய காலகட்டம். சிந்தனைகள் சூழ்ந்த இரவுகளில் உறக்கம் என்பதே கனவாகத்தான் இருந்தது. பேச நிறையவே இருந்தது ஆனால் கேட்கத்தான் யாருமில்லை ! சரி யார் பேசுவதையாவது கேட்ப்போம் என ரேடியோவை நண்பனாக்கி கொண்டேன் அதுவும் இரவுகளில் மட்டும். இரவு பகல் என பொழுதுகள் அனைத்தும் ரேடியோவே கதி என்றிருந்தேன் சுமார் ஆறேழு மாதங்கள் இப்படியாக ஓட மெல்ல மெல்ல முகநூளில் நான் கவிதைகள் ? எழுத தொடங்கியிருந்தேன் நீங்க நான் ராஜா சார் கேட்டு உறங்கிபோவேன் அதற்குமேல் ரேடியோவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போல அதுபாட்டுக்கு ஏதோ பாடிக்கொண்டிருக்கும் . ஆனால் அன்றிரவு அதற்கும்மேல் விழித்திருந்தேன் நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த சமயமது நவீன் மெல்ல பேச துவங்கினார். காதல் பற்றி பேசினார், காதலுக்காக பேசினார், காதலோடு பேசினார், காதலினால் பேசினார், காதலால் பேசினார், ஆம் நவீன், மிஸ்டர்.ரோமியோ என்ற பெயரில் கவிதைகள், கதைகள், கடிதங்கள், பாடல்களோடு காதலை ஆராய்...