Posts

Showing posts from May, 2013

Prometheus

Image
மனிதன யாரு உருவாக்குனா அப்படிங்கற கேள்விக்கான பதில தேடின ஒரு பயணம் தான் பிரமொத்தியஸ் . நட்சதிரமண்டல வரைபடத்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க அதையே வரைபடமா வச்சு இலக்கில்லாத நீண்டதொரு வின்வேளிபயனத்த தொடங்குறாங்க ப்ரோமொத்தியஸ் . மனிதன உருவாக்கினவங்கள பாத்தா அவங்க மீலமா மரணத்த ஜெயக்கலாம்ன்னு பேராசை எண்ணம் கொண்ட முதியவர் எல்லா செலவையும் ஏத்துக்க ஒரு 'ஹியுமனைடு ரோபோ' உட்பட.. உலகின் சிறந்த விஞ்ஞானிகள் குழு ப்ரோமேதியஸ்ல பயனிக்கிறாங்க... அவங்க தேடிப்போன இடத்த கண்டுபிடிச்சாங்களா !! ? நம்மள உருவாக்குனவங்கள கண்டுபிடிச்சாங்களா ?? மரணத்த வென்றாங்களா அப்படிங்கறததான் 124நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமா குடுத்திருக்காரு இயக்குனர் ரிட்லே ஸ்காட் ஜோன் ச்பைட்ஸ் மற்றும் டாமன் லின்டேலாப் கதை எழுத டவ்ரிஸ் வோல்ஸ்கி ஒளிப்பதிவு செதுக்கி சீராக்கி இருக்காரு பியெட்ரோ ஸ்காலியா . இவங்க அத்தன பேர்கிட்டயும் அவங்க முழு திறமையும் பயன்படுத்தி இருக்காரு தயாரிப்பாலர்கள்ள ஒருவரும் இயக்குனருமான ரிட்லே ஸ்காட்  விஞ்ஞானிகளின் பல யூகங்கள  இந்த படத்துல காட்சி படுத்தி இருக்கிறது மிகவும் அற்புதான ஒ...

Hurt Locker

Image
உலக வரலாற்றில் பெரும்பாலும் பேசப்படுவது போரை பற்றியே.. போர் இரு வேறு நாட்டு ராணுவத்துக்கு இடையே நடக்கும் ஆயுத சண்டையே போர் எனப்படுகிறது சில உள்நாட்டுப்போரும் ஆங்காங்கே நடப்பது உண்டு . போரினால் மாற்றி எழுதப்படும் வரலாறுகளில் போரை பற்றியோ . . ராணுவ வீரர்கள் பற்றியோ அவ்வளவாக ஆர்வம் காட்ட படுவதில்லை . இப்படியான ஒரு சமகாலத்தில் போர்களத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எடுக்கப்படும் திரைப்படங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.. சரி வாங்க அப்படியான ஒரு திரைப்படத்தை பத்தி பாக்கலாம். The Hurt Locker 2003ம் ஆண்டு  தொடங்கியதாக சொல்லப்படும்   ஈராக் போரின்போது   . 2004ம் ஆண்டு போர் வீரர்களுடன் தங்கியிருந்த ஊடகவியலாளர் மார்க் போலின் நேரடி போர்கள அனுபவங்களின் தொகுப்பே 'தி ஹர்ட் லாக்கர்' படத்தின் மூலக்கதை ஆகும் . போர்க்களத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் குழு ஒன்றின் வீரர் ஒரு விபத்தில் இறந்துவிட அவருக்கு பதிலாக அக்குழுவில் இடம் பெறுகிறார் கதாநாயகன் 'ப்ரெயின் கெராட்டி' ஜெராமி ரெண்னர் மற்றும் அன்டனி மேக்கி உடன் இனைந்து பணியாற்றும் ப்ரெயின் எப்பொழுதும் முரட்டு தனமாகவே நடந்து கொள்வார்.. ப...

தனி மனிதச் சுதந்திரத்தை உறிஞ்சப்போகும் ‘அட்டை’!

ஆதார் அடையாள அட்டை...! உரிமைகள் உறிஞ்சும் அட்டை...! ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமேய‌ய என்கிறார் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா. ”அதைத் தான் நாங்களும் சொல்கி றோம். அது அடையாள அட்டை இல்லை. ஆதார் என்பது ஓர் ஆள் காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது, என்கிறார்கள் மனித உரிமை ஆர் வலர்கள். நாடு முழுவதும் ‘பயோமெட்ரிக் அடையாள அட்டை’ என ப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும்விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ஆதார்குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை. அதை ஏதோ ரகசிய நடவடிக்கைபோலவே மறைத்து மறைத்துச் செய்கிறார்கள். நந்தன் நீல்கேணியைத் த‌லைவராகக் கொண்ட UIDAI -(Unique Identification Authority of India) என்ற அமைப்பு தான் இந்தக் கணக்கெடுப்பை மேற் கொள்கிறது. இது அரசாங்கத்தின் அங்கம் அல்ல; தனியார் ஏஜென்ஸி. பொதுவாக, இதுபோன்ற பிரமாண் ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில்விவாதிக்கப்பட்டு, சட்டம் இயற்ற ப்பட்டு, அதன...