வண்டி வண்டி ரயிலு வண்டி....
பல ஆண்டுகளுக்கு முன்... எனது ஐந்தாம் வகுப்பில் சென்னை சென்றது. அதன் பின் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மட்டுமே வாய்ப்பும் சூழலும் அமைந்தது. என்னதான் ஏழு கழுதை வயசானாலும் ரயில்ல போகப்போறோம்ன்னு திட்டமிட ஆரம்பிச்சதும். ஆனந்தம், ஆச்சரியம், பூரிப்பு போன்ற அரியவகை உணர்ச்சிகள் அடிமேல் அடியெடுத்து வைத்து அங்கமெங்கும் ஆக்கிரமித்துகொண்டன. இத்தன வருஷம் இல்லாம என்ன இப்போ திடீர்ன்னு ரயில் பயணம், எதுக்கு சென்னை. ? புகைவண்டி பேட்டிகள் போல அடுக்கடுக்காய் கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளில் ஒரு ரவுண்ட் வருவோம். அது அக்டோபர் மாதத்தில் ஏதோ ஒரு நாள், சதீஸ் அண்ணனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வில் இருந்தோம், போன் ரிங்கவும் ரஞ்சித் ஹலோ என்றபடியே வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து 'ஏதோ வெப்சைட்ல இருந்து கூப்பிடுறாங்க, நாளைக்கு கூப்பிடுங்க'ன்னு சொல்லிட்டேன்' என்றபடி எங்களோடு மிங்கிள் ஆகிவிட்டார். அழைத்த நபர் நமது எண்னை முதலாளி பாலன் ஐயாவிடம் வாங்கியதாக குறிப்பிட்டதாக ரஞ்சித் சொன்னார் 'யாரா இருக்கும்?' என ஆவல் தொற்றிக்கொண்டது. அடுத்தநாள் மாலை அந்த எண்ணை அழைத்தேன், 'வணக...