விழித்தெழு

கடத்தப்பட்டதலமைுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரலேியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவகை்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தகளைின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தயைின் பிரிவுத்துயர் சுமந்த தாய்மையின் சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன. அபார்ஜினிஸ், ஆஸ்திரலேியத் தொல்குடிகளின் மூத்த இனம். 25,000 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியகை் கொண்டுஉள்ளது இது. ஆஸ்திரலேியக் கண்டத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும் குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச் சிறைச்சாலயைாகவே ஆஸ்திரலேியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப் பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர்,தலமைுறதைலமைுறையாக அபார்ஜினிஸ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது. அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு ம...